Header image alt text

ewrweவடமாகாணத்தின் பொருளாதார விருத்திக்கு எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றீர்கள் என இந்திய உயர்ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சன்தூ வட மாகாண அரசியல் பிரமுகர்களிடம் கேள்வியெழுப்பியுள்ளார். முறையான திட்டங்கள் வகுக்கப்படுமாயின் மாகாணத்தின் பொருளாதார விருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அமைச்சின் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் நிறைவில் முதலமைச்சர் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் குறிப்பிட்டார். பதவி ஏற்றதன் பின்னர் முதன் முதலாக யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருக்கின்றார். Read more

assaSave the Children அமைப்பு, Concern worldwide மற்றும் Action Against Hunger இணைந்து நடத்திய புதிய ஆய்வு ஒன்றில், சோமாலியாவில் 20,000 இற்கும் அதிகமான குழந்தைகள் பட்டினியால் இறக்கும் அபாயத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. சோமாலியாவின் ஒன்பது மாவட்டங்களில், கடுமையான பஞ்சத்தின் காரணமாக மக்கள் இறக்கும் அபாயத்தில் இருப்பதாகவும், சர்வதேச நாடுகள் உயிர் காக்கும் உதவிகளை சோமாலியாவிற்கு வழங்குமாறும் Save the Children அமைப்பு கோரியுள்ளது. Read more

aSAsநாடு முழுவதும் 684 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் பாதுகாப்பற்ற 200 ரயில் கடவைகளுக்கு சமிஞ்சை விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். இனங்காணப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பற்ற ரயில் கடவைகளுக்கும் இந்த சமிஞ்சை விளக்கை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். Read more

sdfdfவடமாகாண சபையின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக கலாநிதி சர்வேஸ்வரனும் சமூக சேவைகள், மகளிர் விவகாரம் மற்றும்புனர்வாழ்வு அமைச்சராக அனந்தி சசிதரனும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டு தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்கள்.  Read more

UGCபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, அடுத்த மாதம் 7ம் திகதிவரை இந்தக் கால எல்லையை நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.  Read more

ranilபுதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான இடைக்கால அறிக்கை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில், நேற்று இடம்பெற்ற அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். பிரதமர் அங்கு அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், Read more