Header image alt text

help03தெற்கில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடமாகாணத்தில் சேகரிக்கப்பட்ட உலர் உணவு மற்றும் இதர பொருட்கள் இன்று தெற்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தெற்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் கடந்த சில நாட்களாக உதவிப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வந்தன.

பல பொது அமைப்புக்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினர்களாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்கள் பொதி செய்யப்பட்டு இன்று நண்பகல் தெற்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. Read more

nanthiமுல்லைத்தீவில் நந்திக்கடல் வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் இலட்சக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கரையொதுங்கியுள்ளது. இதன் காரணமாக வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதை காணக்கூடியதாக உள்ளது. மேலும், இறந்த மீன்களை அகற்றுவதற்கு இயந்திர உதவியுடன் அப்பகுதி மீனவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். Read more

help04சீரற்ற வானிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மாத்தறை மாவட்டத்தின் அக்குறஸ்ஸ பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் கிராமங்களுக்கு இதன்போது விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இன, மத பேதங்களுக்கு அப்பால் அப்பகுதி மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களை அங்குள்ள சமூக நிறுவனங்களிடம் ஒப்படைத்தார். Read more

P1440339யாழ். உயரப்புலம் மெதடிஸ் மிசன் வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற அமர்வு இன்று வியாழக்கிழமை (01.06.2017) காலை 9.30மணியளவில் பாடசாலையின் அதிபர் கா.ரவீந்திரராஜா அவர்களின் தலைமையில் பாடசாலை கலையரங்கில் நடைபெற்றது. 
நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. அ.அகிலதாஸ்(பிரதிக் கல்விப்பணிப்பாளர், யாழ் வலயம்) அவர்களும், கௌரவ விருந்தினராக திருமதி ம.திரேசா(பொறுப்பதிகாரி மாணவர் பாராளுமன்றம் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். 

Read more