Header image alt text

swordவாள்வெட்டுக்கு இலக்காகி விரல் துண்டிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புலோலி பகுதியைச் சேர்ந்த தினேஸ்குமார் சலோஜிதன் (வயது 18) என்ற இளைஞரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். திருநெல்வேலி கலட்டிச் சந்தியில் நேற்றுமாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வேலைக்காக வந்த குறித்த இளைஞரின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் வாளால் வெட்டியுள்ளனர். வாள்வெட்டுக்கு இலக்காகிய இளைஞர் பொது மக்களினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

dssdவவுனியாவில் வழங்கப்படவுள்ள பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்சி சார்ந்த ரீதியில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக நேற்றுமாலை 4 மணியளவில் பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் ஒன்றிணைந்த அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பாரதிபுரம் பகுதியில் பொருத்து வீடு கேட்டு விண்ணப்பித்தவர்களில் 20பேருக்கு பொருத்து வீடு வழங்குவதற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பொருத்துவீடு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பெயர் விபரங்கள் நேற்று வெளியாகியுள்ளன. இதையடுத்து அப்பகுதி மக்களிடையே ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது. Read more

erநல்லூரில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கு அற்றுசுருத்தல் ஏற்படும் விதத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திற்கு கண்டனம் தெரிவித்து கிளிநொச்சியிலும், மலையகத்திலும் இன்று கண்டனப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று முற்பகல் 10 மணியளவில் நீதிபதி இளஞ்செழியனுக்கு ஆதரவு தெரிவித்து கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட்டோரின் உறவினர்கள் ஏந்தியிருந்தனர். குறிப்பிட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக நீதியான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. Read more

shotதிருட்டு வழக்கில் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் யாழ். நீதிமன்றில் இருந்து தப்பியோடிய சம்பவத்தினால் நீதிமன்றில் பரப்பு நிலவியுள்ளது. யாழ். பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் நீதிமன்றில் உள்ள சிறைக்கூடத்தில் இடம் பற்றாக்குறை காரணமாக மன்றின் அருகாமையில் உள்ள இருக்கையில் இருத்தி வைக்கப்பட்டபோது, அவர் சிறைச்சாலை உத்தியோகத்தருக்குத் தெரியாமல் நீதிமன்றில் நின்ற பொதுமக்கள் போன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். Read more

werwerewபல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கமெராக்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு – வந்தாறுமூலை வளாக முன்றலில், இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. Read more

sdfgfபெற்றோலிய தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டம், எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து பெற்றோலியத்துறை ஊழியர்கள் சேவைக்குத் திரும்பியுள்ளனர்.

இதனால் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது. அத்தியாவசிய சேவை என்பதால் தாம் மீண்டும் சேவைக்குத் திரும்ப இணங்கியதாக பெற்றோலிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுக எண்ணெய் தாங்கியை சீனாவிற்கு வழங்கல், சீனக்குடா துறைமுகத்தின் எண்ணெய் தாங்கியை இந்தியாவிற்கு குத்தகைக்கு வழங்கல் உள்ளிட்ட சில விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

26 (4)யாழ். நல்லூரில் வைத்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்மீது கடந்த சனிக்கிழமை நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமச்சந்திரவின் இறுதிக் கிரியைகள் இன்றுமாலை அவரது சொந்த ஊரான சிலாபம், குமாரகட்டுவில் இடம்பெற்றன.

உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமச்சந்திரவின் பூதவுடலுக்கு, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண நீதிபதிகள், வட மாகாண சட்டத்தரணிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதோடு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் சிலாபம் குமாரகட்டுவ மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Read more

DSC00174மிகவும் வறுமைப்பட்ட, பாதிக்கப்பட்ட, கிராமத்திற்குள் செல்வதற்கே சீரான பாதைகளற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் புத்துவெட்டுவான் கிராமத்தின் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் பழைய புத்துவெட்டுவான் அ.த.க.பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் பாடசாலை சீருடை துணியும் 23.07.2017 அன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

லண்டனில் வசிக்கும் தர்மலிங்கம் நாகராசா அவர்களின் அனுசரணையில் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் புளொட் அமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர்களான மகேந்திரன் (ராஜா), வே.மணியம் மற்றும் வன்னி மேம்பட்டு பேரவையின் தலைவர் கனக தவராசா போன்ற பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
Read more

05யாழ்ப்பாணம் சங்குவேலி விநாயகர் முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி நிகழ்வானது 22.07.2017 சனிக்கிழமை ஆசிரியர் தே.திருமுருகராஜன் (ஜே.பி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்து கொண்டிருந்ததோடு, விசேட அதிதிகளாக ஜி.எ.இசட் இணைப்பாளர் ஆ.சிவானந்தன், கிராம அலுவலர் ஆ.ரஜீவன், சமூக சேவகர் கெங்காதரன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். Read more

sdfsdfஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நீக்கப்பட்டுள்ளது. 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2009ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அந்த இயத்தினால் எவ்வித தாக்குதல் அச்சுறுத்தல்களும் ஏற்படுவதற்கான ஆதாரங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்படவில்லை என ஐரோப்பிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக முடக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதியை விடுவிப்பதற்கும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது. Read more