untitledஅனைவருக்கும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்து தமது சுதந்திரத்தை இழந்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரி வித்துள்ளார். மூன்று தசாப்தங்களாக நீடித்து வந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் தாம் நாட்டின் அனைவருக்கும் சுதந்திரம் பெற்றுக் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். எனினும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த காரணத்தினால் தம்மால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டதாகவும் தமது சுதந்திரம் பாதிக்கப்பட்டதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகம் தமக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்த காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா, பிரித்தானியா போன்ற நாடு களுக்கு தாம் சென்றிருந்த போது தம்மை கைது செய்யுமாறு போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் மகிந்த தெரிவித்ததுடன் மிகுந்த கவலையடைந்துள்ளார்