இலங்கையின் எழுபதாவது சுதந்திர தின நிகழ்வுகள் காலி முகத்திடலில் விமர்சையாக இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் அமைச்சர்கள் பங்கு கொண்டிருந்தனர்.
இதேவேளை, முப்படைகளின் பிரதானிகளும் காவல்துறைமா அதிபர், வெளிநாடுகளின் வெளிவிவகார தூதர்கள் உள்ளிட்ட பலரும் பங்குகொண்டிருந்தனர். இதேவேளை, பிரித்தானிய மகாராணியின் கனிஷ்ட புதல்வாரன இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசி சொபி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். Read more








