Header image alt text

இலங்கையின் எழுபதாவது சுதந்திர தின நிகழ்வுகள் காலி முகத்திடலில் விமர்சையாக இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் அமைச்சர்கள் பங்கு கொண்டிருந்தனர்.

இதேவேளை, முப்படைகளின் பிரதானிகளும் காவல்துறைமா அதிபர், வெளிநாடுகளின் வெளிவிவகார தூதர்கள் உள்ளிட்ட பலரும் பங்குகொண்டிருந்தனர். இதேவேளை, பிரித்தானிய மகாராணியின் கனிஷ்ட புதல்வாரன இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசி சொபி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். Read more

ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாய் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸார் ஊடாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவரை இலங்கைக்கு அழைத்து வர விஷேட பொலிஸ் குழுவொன்று டுபாய் நோக்கி சென்றுள்ளதாக நிதி மோசடி விசாரணை பிரிவினர் தெரிவிக்கின்றனர். இன்று காலை அமெரிக்கா நோக்கி சென்று கொண்டிருந்த சந்தர்பத்தில் டுபாய் விமான நிலையத்தில் வைத்து உதயங்க வீரதுங்க விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கியின் முறி விநியோக மோசடி தொடர்பில் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரும் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி, மல்பாரவில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் வைத்தே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்கள் இருவரும் விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கையின் எழுபதாவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 544 சிறைக் கைதிகள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறிய குற்றங்கள் காரணமாக சிறையிலடைக்கப்பட்ட கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்டெனிய தெரிவித்தார். அநுராதபுரம், களுத்துறை, நீர்கொழும்பு மற்றும் மஹர உட்பட நாடு பூராகவுமுள்ள சிறைச்சாலைக் கைதிகள் சிலரை இன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில், முச்சக்கரவண்டியொன்று மோதியதில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் நேற்று இரவு 7.35 மணியளவில் சீதுவ, ஈரியகஹலிந்த புகையிரதக் கடவையில் இடம்பெற்றுள்ளது. புகையிரதம் மோதியபோது, முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் பயணித்திருந்தனர். விபத்தில் படுகாயமடைந்த நிலையில் நால்வரும் நீர்கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் கடும் காயங்களுக்கு உள்ளான இரண்டு பெண்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். Read more

இலங்கையின் ஆதரவைப் பெறுவதற்காக, இலங்கையை சீனா பொருளாதார ரீதியாக அச்சுறுத்துவதாக இந்திய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுபோன்ற தந்திரோபாயங்கள் தொடரும் என்றும், சீனா இதனைத் திரும்பத் திரும்ப மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான சாட்சிகளை மறைத்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூவருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்னவும் அடங்குகின்றார். ஏனைய இருவரும் உயர் பதவிகளை வகிக்கின்ற பொலிஸ் அதிகாரிகளாவர். கல்கிஸை நீதவான் நீதிமன்ற நீதவானால் இந்த பயணத்தடை உத்தரவு நேற்றிரவு பிறப்பிக்கப்பட்டது. Read more

பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள காணிகளை மீண்டும் அரசாங்கம் கையகப்படுத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு உள்ளிட்ட இருவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதிபத்மன் சுரசேன மற்றும் நீதிபதி சிரான் குணரத்ன ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். Read more

கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பந்தமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொள்கின்ற விசாரணைகளுக்கு அமைவாக கடந்த 01ம் திகதி அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ( புளொட் ) அமைப்பு, தமிழ் மக்கள் சார்ந்து முன்னெடுத்த சமூக மீள் எழுச்சித் திட்டங்கள் இன்று நேற்றல்ல, அமைப்பின் வரலாறு நெடுகிலும் நிறைந்து காணப்படுகின்றன.

இரண்டாம் ஈழப்போர் ஆரம்பமான பின்பு, யுத்தத்தினால் சிதைவடைந்து காணப்பட்ட, இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த தமிழ் மக்களின் தாயக பிரதேசங்களில், தமிழ் மக்களின் ஜனநாய உரிமைகளை பாதுகாக்கவும் இயல்பு வாழ்க்கைக்கான அடிப்படை தேவைகளை கட்டியெழுப்பவும் புளொட் அமைப்பு தனது வெகுஜன முன்னணியாகிய ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஊடாக தீவிரமாக செயற்பட்டிருந்தது.
வவுனியாவிலும், கிழக்கு மாகாணத்திலும் பல தோழர்களின் இன்னுயிரைப் பலியாக்கி மக்களுக்கு தற்காலிகமாக கிட்டைத்திருந்த சமாதானச் சூழலைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தது.
Read more