Header image alt text

நாட்டின் மின்சக்தி நெருக்கடிக்கு தீர்வாக நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பிரதேசங்களுக்கு செயற்கை மழையை பொழிவிப்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பெற்றுக் கொள்ள உள்ளதாக

மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் மின்சாரத்துறை பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறியுள்ளார். Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் மேலதிக பட்டியலில் கிடைத்த ஆசனங்களுக்காக பெயரிடப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் வாரமளவில் தனக்கு கையளிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முழு பொறுப்பையும் குறித்த கட்சிகளின் பொதுச்செயலாளர்கள் ஏற்க வேண்டும் என அதன் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை மூதூர் கிளிவெட்டி பாலத்திற்கு கீழிருந்து 10 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 40 மில்லிமீற்றர் வகையைச் சேர்ந்த கிரேனெற் லோன்சர் ரக சிறிய குண்டுகளே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நேற்று இந்த குண்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதை கண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து குண்டு செயலிழப்பு பிரிவுக்கு வழங்கிய தகவலை அடுத்து அதிகாரிகள் விரைந்து குண்டுகளை செயலிழப்பு செய்துள்ளனர். Read more

சுமார் 7.6 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் உபரியாக வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குடிமக்கள் அனைவருக்கும் சிறப்பு மேலதிக கொடுப்பனவு வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.

சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் ஹெங் ஸ்வீ கீட் சமீபத்தில் நிதி வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தார். அதில், அரசுக்கு சுமார் 7.6 அமெரிக்க டொலர் வருவாய் உபரியாக உள்ளதாக தெரிவித்தார். Read more

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெற்றுகொண்ட வாக்களிப்பு விகிதத்துக்கு அமைய அவர்கள் பெற்றுகொள்ள வேண்டிய உறுப்பினர்களுக்கு மேலதிகமாக அதிக தொகுதிகளை வெற்றிபெற்றதால் இம்முறை 364 உறுப்பினர்கள் மேலதிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் மேலதிக உறுப்பினர் ஒருவர் கூட தெரிவு செய்யப்படாத மாவட்டமாக கிளிநொச்சி இனங்காணப்பட்டுள்ளது. இதன்படி இம்முறை மொத்தமாக உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 869 ஆக அதிகரித்துள்ளதாக பெப்ரல் அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.

விசா அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த 4000 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு பொதுமன்னிப்பின் அடிப்படையில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு காலம் இம் மாதம் 22ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையிலேயே இவ்வாறு திருப்பியனுப்பி வைக்கப்பட்டனர். குவைத்தில் இது வரையில் சுமார் 15 ஆயிரத்து 700 க்கும் அதிகமான இலங்கையர்கள் விசா அனுமதிப் பத்திரமின்றி தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் வேலைவாய்ப்புக்களுக்காக குவைத் சென்றவர்களாக கருதப்படுகின்றனர். Read more

இலங்கை கடல்பரப்பில் உள்ள ‘தீடை’ பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டுவரும் தலைமன்னார் கிராம மீனவர்களுக்கு கடற்படையினர் தொடர்ந்தும் இடையூறை ஏற்படுத்தி வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தீடை பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற ஒரு தொகுதி மீனவர்களை கடற்படையினர் திருப்பி அனுப்பியதை கண்டித்து தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்று மதியம் தலைமைன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
Read more

யுத்த காலத்திலும், யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து காணால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் எல்லா மாவட்டங்களிலும் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இவ்வாறு கிளிநொச்சியிலும் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்று 365வது நாளாக தீர்வின்றி இரவு பகலாக தொடர்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எவரும் இல்லை என நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் அறிவித்திருந்த நிலையிலும் இவர்களின் போராட்டம் தொடர்கிறது. Read more

பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில், இராணுவத் தூதுவராக பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை பதவி நீக்குமாறு வலியுறுத்தி, பிரித்தானிய அரசிடம் பல்வேறு புலம்பெயர் அமைப்புக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் உறவுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு எதிராக, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகள், குறித்த இராணுவ அதிகாரியை பதவி நீக்கம் செய்யுமாறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், Read more

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைகளில் இணைந்து செயற்படுவதற்காக இலங்கை இராணுவத்தின் 12 ஆவது பாதுகாப்பு படையணியினர் இன்றுகாலை லெபனான் நோக்கி பயணித்துள்ளனர்.

உயர்மட்ட அதிகாரிகளும் 14 ஏனைய தரநிலை அதிகாரிகள் உட்பட மொத்தமாக 150 பேர் இந்த படையணியில் உள்ளடங்குவதாக இராணுவ ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே, 10 அதிகாரிகள் உட்பட்ட 140 பேர் அமைதிகாக்கும் பணிகளுக்காக லெபனானுக்கு சென்றுள்ள நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் ஆறாம் திகதி மற்றுமொரு குழு லெபனானுக்கு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.