வடமாகாணத்தில் தகுதிபெற்ற எஞ்சிய 494 தொண்டர் ஆசியர்களுக்கான நியமனங்களை விரைவாக வழங்குமாறு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற வடமாகாண சபையின் வாராந்த செயலாளர் மட்ட கூட்டத்தில் வைத்து முதலமைச்சர் இந்த தகவலை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக முதல்கட்டமாக ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டிருந்த 142 தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.