ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை இன்டர்போல் ஊடாக கைதுசெய்யும் பகிரங்க பிடியாணையை கொழும்பு கோட்டை நீதவான் பிறப்பித்துள்ளார்.
பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரின் விளக்கங்களை கருத்திற் கொண்ட நீதவான் லங்கா ஜயரத்ன, உதயங்க வீரதுங்கவை கைதுசெய்ய சர்வதேச பொலிஸாருக்கு ஆங்கில மொழி மூலம் பகிரங்க கைது ஆணை உத்தரவை பிறப்பித்துள்ளார். Read more
மனித உரிமைகள் பேரவையின் 37வது அமர்வில் இன்று முன்வைக்கப்படவிருந்த இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம அறிக்கையும், அதுதொடர்பான விவாதமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றினை வழங்குவதற்கு ரியர் அட்மிரல் ஆனந்த குருகேயை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதவான் கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஏதிலிகளின் உரிமைகளுக்கு ஆதரவு தெரிவித்து, அவுஸ்திரேலியாவின் நோர்த் கோர்ட் பகுதியில் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை இல்லா பிரேரணையில் இன்று ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் கையெழுத்திட்டுள்ளனர்.
பேஸ்புக் அல்லது வேறேதும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில், குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தின் கீழ்,
உலகில், மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் 2018ஆம் ஆண்டுப் பட்டியலில், இலங்கைக்கு, 116ஆவது இடம் கிடைத்துள்ளது. கடந்த வருடம், 120ஆவது இடத்தைப் பிடித்திருந்த இலங்கை, நான்கு படிகள் முன்னேறி, 116ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
நில அளவைத் திணைக்கள ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதி, கொள்ளுப்பிட்டி சந்தி முதல் புறக்கோட்டை வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.