Header image alt text

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மீது தமக்கு நம்பிக்கையில்லை என காணாமல் போனோரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித உரிமைகள் பேரவையின் 37வது மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில், காணாமல் போனோரது உறவினர்கள் நேற்று கிளிநொச்சியில் சந்திப்பினை நடத்தினர். இதன்பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர், கலாரஞ்சனி இதனைக் கூறினார். Read more

ரஷ்யாவில் வர்த்தக கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் அநேகமானோர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மேலும் 10 பேர் காணாமற்போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்டிடத்தொகுதியின் மேல் மாடியிலேயே முதலில் தீ பரவியதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 660 தீயணைப்பு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா ஹற்றனை அண்மித்துள்ள திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் நேற்றுமாலை 5 மணியளவில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகியதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் நேற்று மாலை கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் கடும் காயங்களுக்குள்ளான 5 பேர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read more

சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்க 58 ஆம் நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும். Read more

இலங்கையின் கடற்தொழில் திட்டங்களுக்கு, நியூசிலாந்து முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஜோனா கெம்கர் ((Joanna Kempker) இதனை தெரிவித்துள்ளார். கடற்தொழில்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவை, அவரது அமைச்சில் சந்தித்து இலங்கை மற்றும் நியூசிலாந்திற்கு இடையேயான இரு தரப்பு உறவுகள் உட்பட பல விடயங்கள் குறித்து அவர் விரிவாக கலந்துரையாடியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ். மாநகர சபையின் மேயராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இம்மானுவேல் ஆர்னோல்ட் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

யாழ். மாநகரசபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் ஆகியோரை தெரிவுசெய்யும் முதலாவது யாழ். மாநகரசபை அமர்வு, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று யாழ். மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. Read more

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ´லங்கா சதொச´ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் இருந்து மனித எலும்புகள் என சந்தேகிக்கப்படும் எலும்புத்துண்டுகள் பல இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த ´லங்கா சதொச´ விற்பனை நிலையம் அண்மையில் முழுமையாக உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்கும் பணி இடம் பெற்று வருகின்றது. Read more

தங்களுக்கான நீதி கிடைக்கும் வரையில், தங்களது போராட்டம் தொடரும் என்று, காணாமல் போனோரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

மனித உரிமைகள் பேரவையின் 37வது மாநாடு நிறைவடைந்துள்ள நிலையிலும், காணாமல் போனோர் அலுவலகம் செயற்பட ஆரம்பித்துள்ள நிலையிலும், காணாமல் போனோரது உறவினர்கள் இன்று கிளிநொச்சியில் சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்தனர். இதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கலாரஞ்சனி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றினூடாக ஆட்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு குறித்த வெலின் கப்பலும் வாகனங்களும் மூழ்கடிக்கப்பட்டதாக பதில் கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் கே.கே.பி.உதயங்க தெரிவித்தார்.

வாகங்களிலும் கப்பலிலும் இருந்த பெறுமதி வாய்ந்த தொலைத் தொடர்புகள் சாதனங்கள், பெறுமதி மிக்க பாகங்கள் அகற்றப்பட்ட பின்னர் அவை இவ்வாறு ஆழ்கடலில் மூழ்கடிக்க செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
Read more

இலங்கையில் இன்னமும் நில அபகரிப்புகள் தொடருமாயின், நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியாது என, ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது அமர்வு, ஜெனீவாவில் நேற்றும் தொடர்ந்தது. மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்-ஹ_ஸைனின் அறிக்கையை, மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் பிரதி உயர்ஸ்தானிகர் கேற் கில்மோர் சமர்ப்பித்தார். ஐ.நாவுடனான தொடர்ச்சியான ஒத்துழைப்பை, இலங்கை வழங்கி வருகிறது எனவும், அதற்கான வரவேற்பை வழங்குவதாகவும், கில்மோர் குறிப்பிட்டார். ஆனால், அதன் பின்னரான அவரது அறிக்கை, இலங்கை மீதான விமர்சனங்களையே முழுமையாக வழங்கியது. Read more