காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மீது தமக்கு நம்பிக்கையில்லை என காணாமல் போனோரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மனித உரிமைகள் பேரவையின் 37வது மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில், காணாமல் போனோரது உறவினர்கள் நேற்று கிளிநொச்சியில் சந்திப்பினை நடத்தினர். இதன்பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர், கலாரஞ்சனி இதனைக் கூறினார். Read more