சைட்டம் மருத்துவ பீட மாணவர்களுக்கு, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் மருத்துவ பட்டத்துக்கு சைட்டம் என பெயர்க் குறிப்பிடப்படுவதற்கு எதிராக, நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, சைட்டம் மருத்துவ பீட பெற்றோர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும், இந்தவார இறுதிக்குள் நீதிமன்றில் அதனை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவ்அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது. இலங்கையுடனான சீனாவின் ஒத்துழைப்பு எவையும் சீனாவின் இராணுவ ஆதிக்கத்தினை இலங்கையில் நிலைநாட்டும் நோக்கத்துடனானது அல்ல என இலங்கைக்கான சீனத்தூதுவர் எச்.ஈ. செங் சேயுவான் தெரிவித்துள்ளார்.
தென்மராட்சி மட்டுவில் மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை கிராம சேவகரின் வீடு உட்பட்ட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக் கும்பல் பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நுவரெலியா தலவாக்கலை – லிந்துலை சமூர்த்தி வலயத்தினால், ஒழுங்கு செய்யப்பட்ட தமிழ், சிங்கள புத்தாண்டு வைபவத்திற்கு புத்த பகவானின் உருவப்படம் பொறித்த சேலையை அணிந்து வந்திருந்த பெண்ணை வைபவத்தில் கலந்துகொண்டவர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றுகாலை இலங்கையை வந்தடைந்தார்.
உலகலாவிய ரீதியில் 199 நாடுகளுக்கு இடையிலான, கடவுச் சீட்டு தரப்படுத்தலுக்கு அமைய இலங்கை 94ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெறவுள்ளது. சட்ட ஒழுங்கு மற்றும் அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான, 2017ஆம் ஆண்டிற்கான அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. நீதிப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் வரையறையுடன் செயற்பட்டதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அழிவடைந்துவரும் தொல்லியல் சின்னமாகிய மன்னார் அல்லிராணிக் கோட்டையை புனரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐவர் உயிரிழந்ததோடு, பலர் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்த, ஹொரணை இறப்பர் தொழிற்சாலையின் சிரேஷ்ட ஆய்வுக்கூட கட்டுப்பாட்டாளர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.