இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் நடைபெறுகின்ற சட்ட விரோதமான வர்த்தக நடவடிக்கைகளை தடுப்பதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுக்கும் வகையிலான செயற்பாடுகளை இரண்டு நாடுகளும் இணைந்து மேற்கொள்வதற்காக இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகவுள்ளது. Read more
நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவுகின்றபோதும், 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இரணைத்தீவு மக்களது காணி விடுவிப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒரு வருடத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள், தற்போது இரணைத்தீவிற்கு சென்று அங்கு இரண்டாவது வாரமாக போராட்டத்தை நடத்துகின்றனர்.