மன்னாரில் பழைய சதொச கட்டடம் அமைந்திருந்த இடத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வுப் பணிகளின் போது, 12 சிறுவர்களின் எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மனித புதைகுழியில் நேற்றைய தினம் (30), அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதே, இவ்வாறு சிறுவர்களின் எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை குறித்த இடத்திலிருந்து, 114 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து படகு மூலம் பிரவேசிக்கின்ற ஏதிலிகளுக்கு இரக்கம் காட்டவே கூடாது என்று, அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்துள்ளார்.
தற்காலிக வாக்காளர் பெயர் பட்டியல் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய தன்னுடைய அல்லது குடும்ப உறுப்பினரின் பெயர் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா, சிட்னி நகரிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர், பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சில அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதென, அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 
உலக சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டின் தலைமைத்துவம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, இன்று கிடைக்கிறது.
இலங்கையில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிசெய்து நல்லிணக்கத்தையும் நிரந்தர சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காக தான் ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்பினை தான் பாராட்டுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் இருந்து இன்று ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேபாளத்தின் தலைநகரான கத்மண்டு நோக்கி பயணமாகியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றுகாலை மியன்மார் ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் நேற்றையதினம் கொலைசெய்யபட்ட யுவதிக்கு நீதி கோரியும் நாளை கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.