பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவை பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் சந்தித்துள்ளார். இச் சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஜனநாயகத்தினை பேணுதல் மற்றும் பலப்படுத்துவதற்கு பாகிஸ்தானின் ஆதரவினை மீண்டும் வழங்குவதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய அரசியல் நிலவரம் மக்களின் விருப்பம் மற்றும் அரசியலமைப்பின்படி அமைதியான மற்றும் இணக்கமான முறையில் முடிவடையும் என பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் நம்பிக்கை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.