மொரட்டுவை பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் வழங்கிய தமிழருவி 2018 இதழ் வெளியீட்டு நிகழ்வு இன்றுமாலை 3.00மணியளவில் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மொரட்டுவை பல்கலைக்கழக உபவேந்தர் K.K.C.K பெரேரா அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பிரதியமைச்சர் அங்கஜன் ராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், தர்மலிங்கம் சித்தார்த்தன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more
ஜனாதிபதிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவுபெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இன்றுமாலை அனைத்துக் கட்சி மாநாடொன்றை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியினர் பங்குகொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இன்றுமாலை நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
மன்னார் மற்றும் உயிலங்குளம் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 13 பொலிஸாருக்கு நேற்று திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. உரிய முறையில் கடமையை செய்யவில்லை என்ற காரணத்தினாலேயே அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
யாழ். வடமராட்சி இமையாணன் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். இமையாணன் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தினுள் நுழைந்த ஆயுததாரிகள், வர்த்தக நிலையத்தை கொள்ளையிடுவதற்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.