இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக முழுமையாக பெண் பணியாளர்களைக் கொண்ட விமானம் ஒன்று நேற்றையதினம் சிங்கபூருக்கு சென்றுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீரீலங்கன் எயார்லைனுக்கு சொந்தமான UL306 என்ற விமானமே சிங்கபூரில் தரையிறங்கியுள்ளது. இந்த விமானம் நேற்று அதிகாலை 01.00 மணிக்கு சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளதுடன், பிரதான விமானி, துணை விமானி உட்பட அனைத்து பணியாளர்களும் பெண்களாக இருந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.