மன்னார் – மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த திருகேதீஸ்வர கோவிலின் அலங்கார நுழைவாயில் உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள், சட்டத்தரணி ஊடாக இன்று காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அருட்தந்தை ஒருவர் உட்பட 10 பேரே, இவ்வாறு இன்றுகாலை சட்டத்தரணி ஊடாக, மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். இவர்களில் மூன்று பெண்களும் ஆறு ஆண்களும் அடங்குகின்றனர். குறித்த 10 பேரிடமும் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட மன்னார் பொலிஸார், அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். Read more
107.22 கிரோகிராம் ஹெரோய்னை மீன்பிடி படகில் கடத்தி வந்த நிலையில் காலி கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட 9 ஈரானியர்களைத் தவிர்த்து இந்தாண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 22 வெளிநாட்டவர்கள் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்களென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அதிகரித்துள்ள மின்சார கேள்விக்கு மத்தியில் போதுமான அளவு மின்சார விநியோகத்தை வழங்க முடியாத காரணத்தினால், சுழற்சி முறையினால் மின்சார விநியோகத் தடைக்கான கால அட்டவணையை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.
வலப்பனை – நுவரெலியா வீதியின் மஹவுவவத்தை பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து தப்பிச்சென்று, வெளிநாடுகளில் மறைந்திருக்கும் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளைத் தேடிக் கைதுசெய்யும் தேடுதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மீன்பிடிப் படகொன்றில் போதைப் பொருட்களுடன் பயணித்த 9 ஈரான் நாட்டவர்கள் இன்று காலை இலங்கையின் தென் கடற் பிரதேசத்தில் வைத்து, 100 கிலோ கிராமுக்கு அதிகமானப் போதைப் பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் விசேட படையணியின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லத்தீப் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, யாழ்ப்பாணத்துக்கு இன்றும் விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, நல்லூர்க் கந்தன் கோவிலுக்குச் சென்ற அவர், அங்கு விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.