பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழரர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 54 வயதுடைய ரவி கதிர்காமர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பிரித்தானியாவின் பினர் நகரில் சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றை நடாத்தி சென்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 அளவில் வர்த்தக நிலையத்தினை திறப்பதற்கு வந்தபோதே இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். ரவி கதிர்காமர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு பாதுகாப்பு துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.இக்கொலை சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் தகவல் அறியும் பட்சத்தில் காவல்துறையினருக்கு தந்துதவுமாறும் கோரியுள்ளனர்.