ரயில் கடவைக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியை அகற்றுமாறு கோரிய ரயில்வே திணைக்களம் பாதையையும் தடை செய்துள்ளது வவுனியா ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதியில் நான்கு உயிர்களைக்காவு கொண்ட பாதுகாப்பற்ற புகையிரதக்கடவைக்கு அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா ரயில்வே திணைக்களத்தினால் பாதுகாப்பு வேலியை அகற்றுமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலி தற்போது அகற்றப்பட்டுள்ளது. அப்பாதை மக்கள் போக்குவரத்திற்கு தண்டவாளம் போட்டு போக்குவரத்து மேற்கொள்வதற்கு ரயில்வே திணைக்களத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. Read more
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் நேற்று சந்தித்துள்ளார்.
கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதாக காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நீதிமன்ற அனுமதியுடன் அங்கு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மன்னார் – பெரியமடு இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரரொருவர் ஆயுதங்கள் தொகையுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். ரிதிமாலியத்த பிரதேசத்தில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து குறித்த ஆயுத தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
யாழ், மட்டுவில் வின்சன் வீதியிலுள்ள வீடு ஒன்றின்மீது இன்று அதிகாலை 12.15 மணியளவில் வாள் மற்றும் கோடாரிகளால் வீடொன்றின்மீது சரமாரியான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – உதயநகர் கிழக்கு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்றுகாலை 7.45மணியளவில் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு காப்புறுதி நிறுவன கிளிநொச்சி கிளை முகாமையாளரான காந்தலிங்கம் பிறேமரமணன் (32) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா ஆசிகுளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் பஸ் உட்பட வாகனங்கள் வேகமாக செல்வதால் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பான முதலாவது ஆலோசனை கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. ஜெனிவா மனித உரிமை பேரவையின் குழு அறையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
17 கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டமொன்றில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் தமது பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் அறிவித்திருந்தது.
சகல அரசியல் கட்சிகளினதும் வருடாந்த கணக்கறிக்கை, கொள்கை பிரகடனம் மற்றும் கட்சியின் யாப்பு என்பவற்றை வெளிப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய குறித்த தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.