தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பாணந்துறை கிளையின் முன்னாள் உப செயலாளர் நேற்றுக்காலை பண்டாரகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபர், வீதி அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான அதிவேக நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு பிரிவின், உதவி கட்டுப்பாட்டாளராக கடமையாற்றிய போதே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உதவி கட்டுப்பாட்டாளராக கடமையாற்றிய பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இவர் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.