புதுவருட தினமான இன்று தமது பிள்ளைகள் எங்கே..? என கோசமிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். a
வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 785 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அவர்களது போராட்ட தளத்திற்கு முன்னால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. Read more
புத்தாண்டு உதயம் முடிவடைந்த பின்னர் உடனடியாக அதிவேக நெடுஞ்சாலையில் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு அதிவேக வீதி நடவடிக்கை மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் சமன் ஓப்பநாயக்க பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (13) பிற்பகல் நீர்கொழும்பு தளுபொதவிலுள்ள இளங்கைதிகள் சீர்திருத்த மத்திய நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
ஐநா அமர்வு முடிந்துள்ளது. இரண்டு வருட கால அவகாசம் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஐநா தீர்மானத்தை நிறைவேற்றமாட்டோம் என்று அரசு முரண்பாடான நிலைமையைக் கொண்டிருக்கின்றது. இதனை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?
இலங்கையும் உலக வங்கியும் இரண்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளன.
பிரதமரால் எல்லை நிர்ணய அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்பிக்கப்பட்டால் விரைவாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த அரச அச்சக திணைக்களம் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்புத் துறைமுக நகரப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதெனத் தெரிவித்துள்ள மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க, நாட்டை விட்டு வெளியேற உள்ள துறைசார் நிபுணர்கள் 80 ஆயிரம் பேருக்கு அந்நகரில் வேலை வாய்ப்பு வழங்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணி நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் கொண்டுவரப்போவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை நிறைவடைந்து விட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.