ஜா-எல – ஏக்கல இரும்பு தொழிற்சாலையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட, இராணுவ கனரக ஆயுத தோட்டாக்களில், பயன்படுத்தப்படாத 409 தோட்டாக்கள் காணப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் குறித்த தொழிற்சாலையின் பொது முகாமையாளர் உட்பட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார். நேற்று குறித்த தொழிற்சாலை நீர்க்கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவினரால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அங்கிருந்து இராணுவத்தின் கனரக ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. Read more