Header image alt text

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பகுதிக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்லவிருந்தவர்கள் பொலிஸாரினால் இன்றுகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்றுகாலை சவுக்கடி பகுதியில் இனந்தெரியாதவர்களின் நடமாட்டத்தினை அவதானித்த மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது சிலாபம் பகுதியைச் சேர்ந்த இருவரும், வந்தாறுமூலையைச் சேர்ந்த ஒருவருமாக மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய 13பேர் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். Read more

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிலாபம் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 6மணிவரை இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இனங்களுக்கு இடையில் பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவொன்றை பதிவிட்டமை தொடர்பில் பிரதேசவாசிகள் தமது எதிர்ப்பை தெரிவித்ததை அடுத்து இவ்வாறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. Read more

பாதுகாப்பான சூழ்நிலையை காரணம் காட்டி எந்த தரப்பினராவது தேர்தலை பிற்போட எதிர்ப்பார்ப்பார்களாயின் அது தீவிரவாதத்திற்கு சமாந்தரமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு நிலைமையை காரணம் காட்டி தேர்தலை பிற்போடுவதற்கான அவசியம் இல்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட வேண்டியதே இன்றைய காலக்கட்டத்தின் அடிப்படை செயற்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். Read more

பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் உரைநிகழ்த்தி, அதை காணொளி மூலமாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய மௌலவியான முனாஜிப் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மக்காவுக்கு சென்று நாடு திரும்பும்போதே நேற்றைய தினம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் வவுனியா, செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் ஆவர். Read more

இந்தியாவுக்குள் தாம், தமக்கான இடமொன்றை ஸ்தாபித்துக் கொண்டதாக, இஸ்லாமிய அரசு என்ற பெயரில் இயங்கும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.

பிரிவினைவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் இடையில், காஷ்மிர் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலொன்றைத் தொடர்ந்தே, தாம் தமக்கான இடமொன்றை ஸ்தாபித்ததாக, அவ்வமைப்பு அறிவித்துள்ளது. இந்த மோதலின்போது, ஐ.எஸ் அமைப்பு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும், அவ்வமைப்பின் அமாக் செய்திச் சேவை, நேற்று முன்தினம் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. Read more

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகள் குழு கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் ஐந்தாம் மாடியிலுள்ள அறையொன்றில் தங்களது தலைவர் சஹ்ரான் காசீம் முன்னிலையில் சத்தியப்பிரமாணத்தை செய்து கொண்டதாக தங்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

தற்கொலைக் குண்டுதாரிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இருமாத காலத்திற்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா வாடகைக்கு தொடர்மாடிக் கட்டடத்தொகுதி ஒன்றில் மூன்று படுக்கையறைகளைக் கொண்ட வீடொன்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஈஸ்டர் ஞாயிறு தினத்திற்கு முதல்நாளே ஈஸ்டர் குண்டுதாரிகள் சத்தியப்பிரமாணம் செய்ததாகத் தெரியவருகிறது.
Read more