Header image alt text

இறுதி யுத்தத்தில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 10ஆம் ஆண்டு நினைவுதினம் வடக்கு கிழக்கில் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து மலர்மாலை அனுவித்து, மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமி ராகினி இன்று பொது ஈகைச்சுடரினை முதன்முறையாக ஏற்றிவைத்திருந்தார். Read more

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், பெரியதம்பனையை வாழ்விடமாகவும் கொண்ட சுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) அவர்கள் நேற்று 17.05.2019 வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த துயருடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

அன்னார் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரும், வெங்கலச் செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினருமான தோழர் சுப்பையா ஜெகதீஸ்வரன்(சிவம்) அவர்களின் அன்புச் சகோதரனாவார் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

குறிப்பு: அன்னாரின் பூதவுடல் பெரியதம்பனை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை (19.05.2019) காலை 10மணியளவில் கற்குளி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனக் கிரியைகள் நடைபெறவுள்ளன.
தொடர்புகட்கு: 0771770801 (சிவம்)

யாழ். இணுவில் மத்திய கல்லூரியின் மைதானத்துக்கான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 16.05.2019 நடைபெற்றது.

புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கிராம எழுச்சித் திட்ட நிதியில் 10 இலட்சம் ரூபா செலவில் மேற்படி மைதானத்துக்கான சுற்றுமதில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் துரைசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் விருந்தினராக கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அடிக்கல்லினை நாட்டிவைத்தார். நிகழ்வில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், பிரதேசசபை உறுப்பினர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரிட்டனின் தொழில்கட்சித் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஜெரமி கொர்வின் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்டிருக்கும் பிரிட்டனின் தொழில்கட்சித் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஜெரமி கொர்வின், தமிழ் மக்களுக்கு நிதி கிடைக்கவும், அவர்களது சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவும் முன்னெடுக்கப்படக் மூடிய செயற்பாடுகளுக்கு எதிர்காலத்தில் பதவிக்கு வரக்கூடிய தொழில்கட்சி அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். Read more

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பயங்கரவாத தலைவராக மொஹமட் சஹ்ரானின் புகைப்படத்தை மடிக்கணினி திரையில் வைத்திருந்த தனியார் பாடசாலை ஆசிரியர் ஒருவர், இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டார்.

கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரனின் தேடுதலின் போது, மடிக்கணினி ஒன்று வீடு ஒன்றின் மேசை மீது இயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது. இதனை அவதானித்த பாதுகாப்பு தரப்பினர், குறித்த கணினியை சோதனை மேற்கொண்டபோது, அதிலிருந்து சஹ்ரானின் புகைப்படங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. Read more

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில், நேற்று மாலை மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். காஞ்சூரங்குடா – சிறிவள்ளிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 15) என்ற சிறுவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றிருந்த வேளையிலேயே, மின்னல் தாக்குதல்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

தமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் அமைதியான முறையில் இன்றையதினம் சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் சிரமதானப் பணிகள் இடம்பெற்று வந்தன. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகவும் அமைதியான முறையில் அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Read more

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் (22) புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளன என்று பதிவாளர் வி. காண்டீபன் அறிவித்துள்ளார்.

கலைப்பீடம் (இராமநாதன் நுண்கலைப் பீடம் உட்பட), விஞ்ஞான பீடம், முகாமைத்துவ மற்றும் வணிக பீடம், விவசாய பீடம், பொறியியற் பீடம், தொழில்நுட்ப பீடம், ஆகிய பீடங்களுக்கும் சித்த மருத்துவ அலகுக்குமான கல்வி நடவடிக்கைகளே எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. Read more

தேசிய படைவீரர்களை நினைவுகூறும் நிகழ்வை முன்னிட்டு 38 சிரேஷ்ட இராணுவப் படை வீரர்களுக்கு பதவி உயர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய சமாதான தசாப்த நிறைவு தினமானது உயிர் நீத்த படைவீரர்களை நினைவுகூறும் நிகழ்வானது 19 மே மாதம் ஆரம்பிக்கப்படுவதுடன் 22ஆம் திகதி 2019ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது. Read more

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குப் பிரவேசிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை, சற்றுமுன்னர் முதல் நீக்கப்பட்டதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

13ஆம் திகதியன்று, நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குப் பிரவேசிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தன.