Header image alt text

கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகலை மருத்துவமனை மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பான விசாரணைக்கு சுகாதார அமைச்சு விசேட குழு ஒன்றை நியமிக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகலை போதனா மருத்துவமனையின் குறித்த மருத்துவருக்கு எதிராக இன்று மாத்திரம் 51 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில், சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி கடந்த 24ம் திகதி குருணாகலையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின் அவ் மருத்துவர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். Read more

வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி விஜயகுனவர்த்தன தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். யாழ் காங்கேசன்துறையில் உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அலுவலகத்தில் பொலிஸாரின் அணி வகுப்பு மரியாதையுடன் அவர் அழைத்துவரப்பட்டார்.

பின்னர் மத தலைவர்களின் ஆசியுடன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி வந்த ரொசாந்த் பெர்னாண்டோவுக்கு இடமாற்றம் கிடைக்கப் பெற்றதை அடுத்து தென் மாகாணத்தில் கடமையாற்றி வந்த விஜய குணவர்த்தன வடக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு உதவி புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஹொரவபொத்தானை பிரதேசத்தின் அதிபர் உள்ளிட்ட 5 பேர் எதிர்வரும் 4ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கெபிதிகொல்லேவ நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 22ம் திகதி கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேகநபர்களுள் உப அதிபரொருவரும் காணப்படுகின்றார். இவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினரான அப்துல் மஜீத் மொஹமட் நியாஸ் என்ற நபருடன் நெருங்கிய தொடர்பினை பேணி வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதத்துடன் தொடர்புகொண்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 63 பேரைக் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலை மேற்கொண்டது காத்தான்குடியைச் சேர்ந்த பிரதான சூத்திரதாரி ஸஹ்ரான் என பொலிஸார் அடையாளம் கண்டு பிடித்ததையடுத்து. குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினர், பொலிஸார், மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் கடந்த ஒரு மாத காலத்தில் 63 பேரைப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். Read more

கைதுசெய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபிக்கு எதிராக, இன்று 16 தாய்மார் முறைபாடு செய்ததாக, குருநாகல் போதனா வைத்தியசாலையின் நிறைவேற்றதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குருநாகல், வாரியபொல, கலேவல, தம்புளை, மாவத்தகம, மெல்சிறிபுர ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே முறைபாடு செய்துள்ளனர். இதேவேளை நேற்று வாரியபொல, குருநாகல் ஆகிய இடங்களைச் சேர்ந்த இரண்டு தாய்மார் குறித்த வைத்தியருக்கு எதிராக முறைபாடு செய்திருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

ஹோமாகம தேசிய வைத்தியசாலையில் பணிப்புரியும் வைத்தியரொருவரை, அவர் அணிந்துவந்திருந்த புர்காவை கழற்றும்படி பணித்தமையின் காரணமாக, தனது வைத்தியர் தொழிலை இராஜினாமா செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் குறித்த வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில், குறித்த வைத்திய அதிகாரி புர்கா அணிந்திருந்தமையின் காரணமாக, நோயாளரொருவர் அவரிடம் மருத்துவம் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளார். Read more

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, இந்தியாவின் பிரதமராக, இரண்டாவது முறையாக, நரேந்திர மோடி, எதிர்வரும் 30ம் தேதி பதவியேற்கவுள்ளார்.

இந்த விழாவுக்காக, குடியரசுத் தலைவர் மாளிகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முன்னாள் பிரதமர்கள் ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்குப் பிறகு, தனிப்பெரும்பான்மையுடன் 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவுசெய்து தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்கும் தலைவர்களின் வரிசையில் நரேந்திர மோடி இடம்பெற்றுள்ளார். Read more

இரணைமடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 8.45 மணியளவில் இரணைமடு புகையிரதக் கடவைக்கு அருகில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இரவு தபால் புகையிரத்தில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் சடலத்தை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். Read more

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள், பிரித்தானியா மற்றும் பிரான்ஸில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களுக்கு இணையானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மிகவும் சக்தி வாய்ந்த இந்த குண்டுகள் வெளிநாட்டிலிருந்து வந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளால் தயாரிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பான தவ்ஹித் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹஷீம் குண்டு தயாரிக்கும் ஆற்றலை கொண்டிருக்கவில்லை. வெளிநாட்டவர்களின் உதவியுடன் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. Read more