பயங்கரவாதத்தை முறியடிப்பது தொடர்பாக, எதிர்வரும் வியாழக்கிழமை (16), ஐக்கிய அமெரிக்காவில், பேச்சுவார்த்தையொன்று நடத்தப்படவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவுக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் ரிச்சட் பொம்பியோ தலைமையிலான குழுவுக்கும் இடையில் நடைபெறவுள்ள இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதோடு, இதில் பங்கேற்பதற்காக, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவின், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளனர். Read more
மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் அஜந்தன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை இழந்த சிறார்கள் குறித்து தகவல் வழங்குமாறு காவற்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கிராமத்தில் நேற்றுமாலை 5.10 மணியளவில் வீசிய கடும் காற்று காரணமாக 22 வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.