Header image alt text

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து நாடாளுமன்றிற்கு அறிவிப்பதற்காக நியமிக்கப்பட்ட விஷேட தெரிவு குழுவிற்கு, இன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரால் சாந்த கோட்டேகொட அழைக்கப்பட்டுள்ளார்.

இன்றுகாலை 9மணியளவில் அவர் தெரிவுக்குழுவில் முன்னிலையாகின்றார். முதலாவது சாட்சியாளராக அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய இன்று முற்பகல் 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை சாட்சி வழங்கல் இடம்பெறவுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. Read more

பௌத்த பிக்குவால் கணதேவி தேவாலயம் என பெயர்மாற்றப்பட்ட நீராவியடி பிள்ளையார் ஆலய பெயர்ப்பலகை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் கட்டளைப்படி மீண்டும் நீராவியடி பிள்ளையார் ஆலயம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் குறித்த சர்சைக்குரிய ஆலயம் தொடர்பான வழக்கு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்த்தினரால் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்டநீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. Read more