ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இன்று ஐந்தாவது நாளாக நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஐந்து கட்சிகள் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தவிர்ந்த ஏனைய கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கப்படவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த கோரிக்கை ஆவணத்தில் இன்றுமாலை கையெழுத்திட்டுள்ளனர். இதன்படி தமிழ் அரசு கட்சி, புளொட், ரெலோ, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன. Read more
எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் வகையில் யாழ், கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் யாழ். பல்கலைக் கழகத்துக்கு அண்மையில் அமைந்துள்ள ‘ப்றைட் இன்’ விடுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகியது.
புத்தளம், எலுவங்குளம் ஊடாக மன்னார் செல்லும் வீதி இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 15 கிலோ எடையுடைய இரண்டு கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமை போன்று இடம்பெறவுள்ளது.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது.
போக்குவரத்து சட்டவிதிகளை மீறும் சாரதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை சீட்டுக்களை மூன்று மொழிகளிலும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இன்று இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் தீவிரமாக தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளமையால் மக்கள் பதற்றமான நிலையில் காணப்படுகின்றனர்.