பிரித்தானியாவிற்கான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி கட்சியின் அந்நாட்டு அமைப்பாளராக பாலா, உதவி அமைப்பாளராக ஸ்கந்தா, நிர்வாகப் பொறுப்பாளராக கமலி, உதவி நிர்வாகப் பொறுப்பாளராக ராசிக்,
பொருளாளராக வரதன், அங்கத்துவ நடவடிக்கை பொறுப்பாளர்களாக தயா மற்றும் முரளி, தகவல் பிரிவு பொறுப்பாளர்களாக டொக்டர் சுரேஸ் மற்றும் சிவபாலன், நலன்புரிப் பொறுப்பாளர்களாக வேந்தன், பாபு, உதயன், முகுந்தன், சந்துரு, இணைப்பாளராக அல்வின் ஆகிய தோழர்களும், நிர்வாக அங்கத்தவர்களாக சபா, நிரோசன், தயாமயூரன், சபா (சாவகச்சேரி), பிறேம்சங்கர், சங்கர் ஆகிய தோழர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இந்திய தொழிநுட்ப அதிகாரிகள் குழுவுடன் இந்தியாவின் எயார் இந்திய அலைன்ஸ் விமானம் ஒன்று இன்று யாழ். பலாலி விமான நிலையத்தில் தரை இறங்கியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 588 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08ஆம் திகதிமுதல் நேற்றுவரை இவ்முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 565 முறைப்பாடுகளும்,
வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த நூதனசாலை நிர்மாண பணிகளின்போது அரச நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் வழக்கு எதிர்வரும் 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அனைத்து மக்களும் தேர்தலில் கலந்துகொண்டு, வாக்களிப்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியிருக்கிறது.
மலேசியாவில் புலிகளின் அமைப்பிற்கு ஆதரவளித்தமை தொடர்பில் கைதான 12 பேரும் காவற்துறையினரால் நியாயமான காரணங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
சிலாபம் பகுதியில் சந்தேகமான முறையில் சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த 6 தமிழ் இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டைகள், எதிர்வரும் 18ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படவுள்ளன. அதற்கமைய மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் ஊடாக அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் ரசிக பீரிஸ் தெரிவித்துள்ளார்.