கொழும்பு துறைமுக நகரின் 269 ஹெக்டேர் நிலப்பகுதி இன்று பிற்பகல் உத்தியோகபூர்வமாக இந்நாட்டுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்நாட்டுக்கு புதிதாக இணையும் இந்த நிலப்பரப்பிற்காக நிறைவு முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்த போது சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பின்க் தலைமையில் இந்த துறைமுக நகர திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது பற்றி கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
திருகோணமலை- துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனையாவெளி பகுதியில் 4 வயது சிறுவன் ஒருவன் இன்றுகாலை கிணற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
50 ஆயிரம் உதவி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கு முன்வைத்துள்ள யோசனை ஊடாக ஆசிரியர் சேவை யாப்பு முழுவதுமாக மீறப்படுவதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தங்குவதற்கான விசா கடவுச்சீட்டு எதுவுமின்றி சட்டவிரோதமான முறையில் தங்கி இருந்த மாலைதீவு பிரஜை ஒருவர் நேற்று கைதாகியுள்ளார்.
மலையகத்திற்கான ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது. மலையகத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் தியத்தலாவ-பண்டாரவளை ரயில்வே நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளங்களில் நேற்று மண்மேடு சரிந்து விழுந்ததில் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது.
ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் 04.12.2019 புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் தமிழகத்தின் பிரபல அரசியல்வாதியான திரு. தொல். திருமாவளவன் அவர்களினால் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது.
பிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து சைகைசெய்து அச்சுறுத்தியதாக
13ஆவது தெற்காசிய விளையாட்டு நிகழ்வில் கலந்துகொள்ளவென நேபாளம் சென்றிருந்த இலங்கையைச் சேர்ந்த ஆறு வீரர்கள் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.