peradeniyaயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் கலஹா சந்தியில் இன்று இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது. இனவாதத்தை தூண்டி ஆட்சியதிகாரத்தை தக்க வைக்கும் முயற்சி என அவர்கள் தமது கண்டனத்தின்போது தெரிவித்துள்ளனர். பேராதனைப் பல்கலைக் கழக அனைத்து பீடங்களினதும் சுமார் 1000 மாணவர்கள் இதில் பங்கு கொண்டிருந்தனர்.