Header image alt text

cv-sivapalanபிரித்தானியாவிற்கு விஜயம் மேறகொண்டுள்ள வடமாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி..விக்கினேஸ்வரனை தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (P.L.O.T.E) மத்திய குழு உறுப்பினரும் பிரித்தானிய கிளையின் முக்கியஸ்தர்களில் ஒருவருமான தோழர் ரி.சிவபாலன் சந்தித்தார். இவ் சந்திப்பில் இங்கிலாந்தின் தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சர்மா மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை தலைவரும் உடனிருந்தனர்

north-02யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய வட மாகாண நகரங்களின் வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வட மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை முழு கடையடைப்பு அமைதியாக நடைபெற்ற போதிலும், மாலை கிளநொச்சியில் இடம்பெற்ற சாலை மறியல் போராட்டத்தின்போது, காவல்துறையை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். Read more

stalin_newகாவிரி பிரச்சனை தொடர்பாக விவாதிப்பதற்காக தி.மு.க.வின் முயற்சியில் சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். Read more