முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகளை விசாரணைக்கு உட்படுத்தியமை தொடர்பில் ஜனாதிபதி காரசாரமான முறையில் கருத்து வெளியிட்டதால், நல்லாட்சியில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை தீர்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா களத்தில் இறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மைத்திரி-ரணில் ஆட்சியில் ஏற்கனவே சுதந்திரக் கட்சி-ஐ.தே.கவின் சில உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில், கோட்டாபய குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்தானது இருதரப்பு முரண்பாட்டின் உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more