Header image alt text

maithri & ranilஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளனர். எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியினுள் இவர்களது விஜயம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியும், பிரதமரும் இந்தியாவின் விருந்தினர்களாக செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே சமயத்தில் அண்டை நாடான இந்தியாவுக்கு செல்வது மிகவும் அரிதான விடயம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்களான ராஜ்நாத்சிங், சுஸ்மா சுவ்ராஜ், நிடிஸ் கட்காரி உட்பட பல உயர்மட்ட தரப்பினர்களை சந்திக்க உள்ளனர். Read more

all-ceylon-hindu-congressஇனவாதத்தைத் தூண்டும் வகையிலான பிரசாரங்களை உடன் நிறுத்துமாறு அகில இலங்கை இந்து மாமன்றம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது.

வடமாகாண முதலமைச்சர் ”எழுக தமிழ்” பேரணியில் ஆற்றிய உரையை தவறாக எடுத்துக்காட்டி தெற்கிலுள்ள அரசியல்வாதிகளும் மதத்தலைவர்களும் இனத்துவேச அறிக்கை விடுப்பதையிட்டு அகில இலங்கை இந்து மாமன்றம் கவலையை வெளியிட்டுள்ளது. ஏனைய இனங்களுக்கும் மதங்களுக்கும் எதிராக தான் செயற்படவில்லை என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ள நிலையிலும், அவரை ஒரு இனவாதியாக இழிவுபடுத்துவதற்கு சிலர் முயற்சிப்பதாக மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more

stalinநாட்டின் அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் இம் மாதம் 5ம் திகதி பாரிய எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட எந்தவொரு சலுகைகளும் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என, ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். Read more