ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளனர். எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியினுள் இவர்களது விஜயம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியும், பிரதமரும் இந்தியாவின் விருந்தினர்களாக செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே சமயத்தில் அண்டை நாடான இந்தியாவுக்கு செல்வது மிகவும் அரிதான விடயம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்களான ராஜ்நாத்சிங், சுஸ்மா சுவ்ராஜ், நிடிஸ் கட்காரி உட்பட பல உயர்மட்ட தரப்பினர்களை சந்திக்க உள்ளனர். Read more