யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த சம்பவத்தைக் கண்டித்து, வடக்கில் எதிர்வரும் 25ம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழரசு கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட்,, ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சமூக ஜனநாயக கட்சி ஆகிய ஏழு கட்சிகள் கூட்டாக இந்த அழைப்பை விடுத்துள்ளன.
கடந்த 21ம் திகதி யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக இன்றையதினம் மாலை 3.30க்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 4 அங்கத்துவ கட்சிகளும் மேலும் மூன்று கட்சிகளும் இணைந்து அவசர கலந்துரையாடல் ஒன்றை மாலை 5.30 மணிவரையில் நடத்தியிருந்தன. Read more