Header image alt text

malayagam00யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்தும், மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், மலையகத்தில் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் பொதுமக்களும், சிவில் அமைப்பினரும் குறித்த தோட்டத்தின் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்து, உயிரிழந்த யாழ். பல்கலைகழக மாணவர்களுக்கு எமது உணர்வுபூர்வமான அஞ்சலிகள், அப்பாவி மக்களை துன்புறுத்தும் பொலிஸாரின் அடாவடி தனத்துக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறும், அஞ்சலிக்காக மெழுகுவர்த்தியை வைத்தும் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். Read more

eastern provinceயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பிற்கு கண்டனம் தெரிவித்து கிழக்கு மாகாண சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை இம்மாத அமர்வுக்காக துனை அவைத்தலைவர் பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் வியாழக்கிழமை கூடியது. தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஜெ. ஜனார்த்தனன் இவ் உயிரிழப்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் பிரேரணையை சபையில் முன் வைத்தார். Read more

northern_provincial_council1உயரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் வட மாகாண சபையின் இன்றைய 64ம் அமர்வில் 2 நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மாணவர்கள் படுகொலைக்கு உடனடி விசாரணை வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்லையேல் அரச இயந்திரத்தை முடக்குவோம் என மாகாணசபை உறுப்பினர்கள் கூறியுள்ளனர். Read more

police ...மட்டக்குளிய பிரதேசத்தில் 4 பேரின் உயிர் பலியான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் மேலும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று இரவு இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட உள்ளனர்.

இதேவேளை அண்மையில் இரத்தினபுரி பிரதேசதத்தில் வைத்து சம்பத்துடன் தொடர்புடைய குடு ரொஷான் உள்ளிட்ட 11 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர்