Header image alt text

sdfஇலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு எவ்வாறான உதவிகளை வழங்கமுடியும் என்பது தொடர்பிலும் இலங்கையில் வடக்கு பிரச்சினை குறித்தும், இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் விரிவாகக் கலந்துரையாடியதாக, நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்தார். நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, பிரதமர் தலைமையிலான குழு, கடந்த வெள்ளிக்கிழமை, நியூசிலாந்தை அடைந்தது.

அதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, தலைமையிலான குழுவினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில், இருதரப்பு பேச்சுவார்த்தையொன்று, ஹொக்லேன்டில் உள்ள அரசாங்க இல்லத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது. Read more

xcமத்திய அரசாங்கம் சம உரிமை கொடுத்து, வட மாகாண சபையுடன் பேசி எமக்கு இருக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்வைத்தர முன்வந்தால் தான், எங்களால் நாட்டில் சம உரிமையுடன் ஒருமித்து வாழ முடியும், என, இலங்கைக்கான சுவீஸ் உயர்ஸ்தானிகர் சுமோட்டா சோமூகவிடம் தாம் தெரிவித்துள்ளதாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், கூறியுள்ளார்.

அவ்வாறு இல்லை எனின் நல்லிணக்கத்தினை கொண்டுவருவது மிக கடினம் என தான் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுமோட்டாவுடனான சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே வடமாகாண முதலமைச்சர், மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார். Read more

D.Sithadthan M.P,.‘எழுக தமிழ்’ பேரணி சர்வதேசத்துக்கு ஒரு தெளிவான செய்தியைச் செல்லியுள்ளது

நேர்காணல் மகேஸ்வரன் பிரசாத்

எழுக தமிழ் மக்கள் பேரணி அரசாங்கத்துக்கோ அல்லது எந்தவொரு நபருக்கோ எதிரானது அல்ல. தமிழ் மக்களுக்கான உரிமையைக் கோரும் கவனயீர்ப்பு போராட்டமே. தீர்வொன்றை வழங்கக் கூடாது என கண்டியிலிருந்து பேரணி நடத்த முடியுமாயின் தீர்வொன்றை வழங்குங்கள் எனக் கூறி பேரணி நடத்துவதற்கு எமக்கு உரிமை இல்லையா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கேள்வியெழுப்பினார்.

Read more

sampanthan‘பிளவுபடாத நாட்டுக்குள் அனைத்து மக்களும் உள்ளடங்கப்படக்கூடிய வகையில் அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதற்கான ஒத்துழைப்புக்கள், முயற்சிகளை நாங்கள் நல்கி வருகின்றோம்’ என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,
Read more

sssஎங்களுக்கு சம்பள உயர்வை வழங்காது இழுத்தடிக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்வரும் காலத்தில் நல்ல பாடம் புகட்டுவோம் என்று, லிந்துலை நகரை சுற்றி வலைத்த எட்டுக்கும் மேற்பட்ட தோட்ட பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

இன்றுகாலை இடம்பெற்ற இப் போராட்டத்தில் முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் இராஜாதுரையின் உருவ பொம்மை ஒன்றுக்கு பாதணி மாலையிட்டு தொழிலாளர்கள் தூக்கிவந்து எரியூட்டினர்.
Read more

gotabaya......முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. எவன்காட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலைக்கு அனுமதியளித்ததாக குற்றம்சாட்டப்பட்டு இவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், சீனாவில் இடம்பெறும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள, தனது கட்சிக்காரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, கோட்டாபயவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். Read more

???????????????

லண்டன் ஓம் சரவணபகவா சேவா அறக்கட்டளை நிதியத்தினால் முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்தின் பயனாளிகளுக்கு 1,000,000 ரூபா பெறுமதியான 37 துவிச்சக்கரவண்டிகள் 118 குடும்பங்களுக்கு உடுபுடவைகள் மற்றும் 108 குடும்பங்களுக்க உலர் உணவு பொதிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன

ஓம் சற்குரு சிறி சரவணபாபா சுவாமி அவர்களின் 37 வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு லண்டன் ஓம் சரவணபகவா சேவா அறக்கட்டளை நிதியத்தினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க பிரிவில் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெண்தலைமைத்துவ 1851 குடும்பங்களை கொண்ட அமைப்பாக அமரா பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் ஒன்றியத்தை சேர்ந்த தெரிவு செய்யபட்ட பயனாளிகளுக்கு இனிய வாழ்வு இல்ல மண்டபத்தில் வைத்து இவ் அறக்கொடை நிகழ்வு 01.10.2016 அன்று நடைபெற்றது. இவ் நிகழ்வின் போது பயனாளிகள் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். Read more