Header image alt text

அமரர் இராமலிங்கம் சின்னத்தம்பி அவர்களின் இறுதிக் கிரியைகள் பற்றிய அறிவித்தல்-

sdfsdfdநேற்றையதினம் (02.07.2016) அமரத்துவமடைந்த யாழ் நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனை மற்றும் திருநாவற்குளத்தை வாழ்விடங்களாகவும் கொண்டவரும், எமது கழகத்தின் மூத்த உறுப்பினர் தோழர் பாரூக் அவர்களின் அன்புத் தந்தையுமான திரு. இராமலிங்கம் சின்னத்தம்பி அவர்களின் இறுதிக் கிரியைகள் நாளை (04.07.2016) திருநாவற்குளத்தில் இடம்பெறவுள்ளது.

அன்னாரின் பூதவுடல் வவுனியா, திருநாவற்குளம், மூன்றாம் ஒழுங்கையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகள் நாளை திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரது பூதவுடல் பத்தினியார் மகிழங்குளம் இந்து மாயனத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்படும்.

தொடர்புகட்கு
யோகன் – 0775155393
சண்முகலிங்கம் – 0771654136

800 பேருக்கு வீடுகளை அமைப்பதற்கு யாழில் உதவி-

sajith jaffnaவீடமைப்பு கடன் திட்டத்தின் கீழ், யாழ் மாவட்டத்தில் 800 பயனாளிகளுக்கான காசோலைகளை தேசிய வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்கி வைத்துள்ளார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், அம் மாவட்ட முகாமையாளர் ரவீந்திரனின் தலைமையில் இன்றுகாலை இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. ´2025ம் ஆண்டு அனைவருக்கும் வீடு´ என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி யாழில் வறுமைக்கோட்டுக் கீழ் உள்ள பயனாளிகள் தமது வீடுகளை அமைப்பதற்கும், பழைய வீடுகளை திருத்துவதற்காகவும், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு சுமார் 800 பேருக்கு 50 ஆயிரம் முதல் 3 இலட்சம் வரை வீடமைப்பு கடன் திட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சிறுவர், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட ரயில் கடவை காப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்

railway protestவவுனியா மாவட்ட ரயில் கடவை காப்பாளர்கள் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா மாவட்ட ரயில் கடவை காப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வடபகுதிக்கான ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டன் பின்னர் தற்காலிமாக ரயில் கடவை காப்பாளார்களாக தம்மை சேவையில் இணைத்து கொண்டதாகவும், இதுவரை நிரந்த நியமனம் வழங்கவில்லை எனவும், சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்டத்திலுள்ள சுமார் 75 ரயில் கடவை காப்பாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சோதனை நடவடிக்கை-

airportகட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது என விமான நிலையத்தின் பாதுகாப்புத் தலைமையதிகாரி தம்மிக விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார். விமான நிலைய சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு பொருளாதார மத்திய நிலையம்; தொடர்பில் கருத்துக் கணிப்பு-

vigneswaranவடக்கில் பொருளாதார மத்திய நிலையத்தை எந்த இடத்தில் அமைப்பது என்பது தொடர்பில் வட மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்துக்கணிப்பொன்றை நடத்திய பின்னரே, இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையில் சமமான கருத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட சீ.வி. விக்னேஸ்வரன், கருத்துக் கணிப்பொன்றை ஏற்படுத்தி இறுதி முடிவை எடுக்கவுள்ளதாகவும், எதிர்வரும் வாரத்திற்குள் இதற்கான முடிவை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். Read more

unnamed

27வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு சூரிச்சில் தமிழீழ மக்கள் கல்விக்கழகம் நாடத்தும் சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டி (2016) விபரங்கள்.

Read more

மரண அறிவித்தல் – திரு. இராமலிங்கம் சின்னத்தம்பி அவர்கள்-

ramalingam sinnathampi 02.07.2016யாழ் நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனை மற்றும் திருநாவற்குளத்தை வாழ்விடங்களாகவும் கொண்டவரும், எமது கழகத்தின் மூத்த உறுப்பினர் தோழர் பாரூக் அவர்களின் அன்புத் தந்தையுமான திரு. இராமலிங்கம் சின்னத்தம்பி அவர்கள் இன்று (02.07.2016) காலமானார்.

அன்னாரின் பிரிவுத் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தார், நண்பர்களுடன் எங்களின் ஆழ்ந்த துயரையும் பகிர்ந்து கொள்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

தொடர்புகட்கு
யோகன் – 0775155393
சண்முகலிங்கம் – 0771654136

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமனம்-

Untitled-2_copysdasdஇலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இநத நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை இந்திரஜித் குமாரசுவாமிக்கான உத்தியோகபூர்வ நியமனம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனின் பதவிக்காலம் கடந்த 30ம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் அந்தப் பதவி குறித்து ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். 1950ம் ஏப்ரல் ஆண்டு பிறந்த கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி அவர்கள் பொதுநலவாய அமைப்பின் பொருளாதார அலுவல்கள் பிரிவின் முன்னாள் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றிருந்தார். 1973ஆம் ஆண்டு இவர், இலங்கை மத்திய வங்கியில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.

உடையார்கட்டு விபத்தில் பாலகன் மரணம்-

accidentமுல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டுபகுதியில் வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் பச்சிளம் பாலகன் உயிரிழந்துள்ளார். முன்பள்ளியிலிருந்து முச்சக்கர வண்டியில் வீடு வந்த சிறுவன் முச்சக்கர வண்டியை விட்டு இறங்கி வீடு சென்றுள்ளார். இதன்போது, தனது பொருளொன்றை முச்சக்கரவண்டியில் தவறவிட்டு அதை எடுப்பதற்காக மீண்டும் முச்சக்கரவண்டியை நோக்கி சென்றபோது எதிரே வந்த வாகனத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த சிறுவன் உடையார்கட்டை பகுதியைச் சேர்ந்த காந்தரூபன் தர்சன் (வயது 3) என்பவராவார். விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முகாமில் வாழ்ந்த மக்களுக்கு கீரிமலையில் மாற்றுக்காணி-

1467441563_download (4)யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் கடந்த 28 வருடங்களாக முகாம்களில் வாழ்ந்துவந்த மக்களுக்கு முதற்கட்டமாக காணிகள் வழங்கப்பட்டன. வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்து தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குற்பட்ட நலன்புரி நிலையங்களில் குடும்பங்கள் பெருக்கத்தினால் முகாம்களில் உள்ள பல குடும்பங்களுக்கு சொந்த நிலம் இல்லாத நிலையில் மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு மாற்றுக்காணிகள் வழங்கும் நடவடிக்கைகள் மாவிட்டபுரம் – கீரிமலை பகுதியில் நேற்றையதினம் தொடங்கப்பட்டுள்ளன. குறித்த மக்களை குடியேற்ற மாற்று காணிகள் 40 ஏக்கர் பகுதியில் பகிர்ந்தளிக்கப்பட்டன. முதற்கட்டமாக மாவிட்டபுரம்- கீரிமலை பகுதியில் சீமேந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணியில் தலா இரண்டு பரப்பு காணி வழங்கப்பட்டு 129 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. தெல்லிப்பளை பிரதேச செய்லர் சிறிமோகன் மற்றும் நில அளவை திணைக்கள அதிகாரிகள் வழங்கிவைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வைத்தியர்களின் கவனக்குறைவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-

1467456131_download (8)மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் இன்றுகாலை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள், தமது கடமைகளை பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளாமைக்கு எதிராகவே பொது மக்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டமானது பட்டிருப்பு தேசிய பாடசாலையில் ஆரம்பமாகி பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்று நிறைவடைந்துள்ளது. பட்டிருப்புமத்திய மகா வித்தியாலத்தில் கல்வி கற்ற 07 வயதுடைய மேகநாதன் மோகவர்மன் என்ற மாணவன் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மே 15ம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மரணமடைந்தார். குறித்த மாணவனின் மரணத்திற்கு வைத்தியர்களின் கவனக்குறைபாடே காரணம் எனக் கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மரணமடைந்த மாணவனின் தந்தை கருத்து தெரிவிக்கையில், Read more

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உலருணவு பொதிகள் வழங்கிவைப்பு-(படங்கள் இணைப்பு)

Bஒளிரும் வாழ்வு அமைப்பினுடாக அவ் அமைப்பின் செயலாளர் அம்பிகைபாலனால் முன்வைக்கபட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக, முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்க்கு உட்பட்ட

மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து செயல்படும் ஒளிரும் வாழ்வு அமைப்பில் அங்கத்தவர்களாக உள்ள 15 குடும்பங்களுக்கு 30,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்களை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினர் வழங்கி வைத்துள்ளனர். Read more

யாழ் மாணவர்களுக்கு நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை-

ilancheliyanயாழ் நகர்ப்புறத்தில் உள்ள பாடசாலைகளில் போதைவஸ்து பாவனை சில மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக கவலை வெளியிட்டுள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், பாடசாலை நேரத்தில் போதைவஸ்து பாவனை குற்றச் செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதாகவும், அத்தகைய மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் நேற்று முன்தினம் எச்சரிக்கை செய்துள்ளார். நூறு கிலோ கஞ்சா வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கு தொடர்பான பிணை மனு யாழ் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி இளஞ்செழியன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். யாழ் நகரில் உள்ள பிரபல பாடசாலைகளில் உள்ள ஒரு சில மாணவர்களே பாடசாலை நேரத்தில், பாடசாலை வளாகத்தில் மது அருந்துதல், புகை பிடித்தல் மற்றும் போதை கலந்த இனிப்புகளை ருசித்தல் போன்றவற்றை பயன்படுத்துகின்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக மேல் நீதிமன்றத்திற்கு செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீதிபதி கூறியுள்ளார். Read more

பங்களாதேஷ் தலைநகரில் பாரியளவில் துப்பாக்கிச்சூடுகள்-

rtttபங்களதேஷ் தலைநகர் டாக்காவின் கஃபேயில் நேற்றிரவு தொடர்ச்சியான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொலிஸார் அப் பகுதியை சுற்றிவளைத்து தாக்குதல் நடவடிக்கையை தடுத்துள்ளதாக தெரியவருகின்றது. இந்த சம்பவத்தின் மையமாக கருதப்படுகின்ற குறித்த விடுதி, புலம்பெயர்ந்த மக்கள், இராஜ்ஜிய அதிகாரிகள் மற்றும் மத்திய தரவர்க்க மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாகும். தாக்குதலில் காவல்துறையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளதேர்டு 30பேர் வரையில் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது வெளிநாட்டவர் உள்ளிட்ட பலர் பணயக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டிருந்தனர். பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்களில் இரண்டு இலங்கையர்களும் அடங்கியிருந்தனர். இந்நிலையில் இலங்கையர் இருவர் உள்ளிட்ட 20 பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளனர். Read more

தெற்காசிய புலம்பெயர் மாநாட்டில் பிரதமர் விஷேட உரை-

ranilமூன்றாவது தெற்காசிய புலம்பெயர் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துக் கொண்டு விஷேட உரையாற்ற உள்ளார். மூன்றாவது தெற்காசிய புலம்பெயர் மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் சிங்கப்பூரில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் உரையாற்றவுள்ளார். அத்துடன் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, தெற்காசியாவில் சட்டம் மற்றும் அமைதி எனும் தலைப்பில் இம் மாநாட்டில் உரையாற்றவுள்ளார். மாநாட்டில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் சிங்கப்பூரின் பிரதி அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம், வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக புத்தளத்தில் பேரணி-

wewewபோதைப்பொருள் பாவனைக்கு எதிராக புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களால் விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட உடப்பு மற்றும் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயங்களின் மாணவர்களால் இன்றுகாலை 8.00 மணியளவில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மாணவர்களால் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான கையேடுகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த விழிப்புணர்வு பேரணியில், பாடசாலை மாணவர்களுடன் பெற்றோர்கள், பாடசாலைகளின் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், கிராம மற்றும் சமூர்த்தி அதிகாரிகள் உள்ளிட்ட பெருமளவிலான பிரதேச மக்களும் பங்கேற்றிருந்தனர்.

இவ்வருட இறுதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்-

wereஉள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த அரசாங்கம் உடனடியான முனைப்புகளை மேற்கொள்ளும். அந்த வகையில் இவ்வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் குறித்த தேர்தலை மேற்கொள்ள உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த ஜனாதிபதியும் பிரதமரும் விரைவான தீர்மானங்களை மேற்கொள்வார்கள் எனவே குறித்த விடயத்தை பூதாகரமாக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். புற கோட்டையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளார் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

உதய கம்மன்பில பிணையில் விடுதலை-

udaya gammanvilaஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், 5 இலட்சம் ரூபாவான மூன்று சரீரப் பிணைகளிலும் அவரை விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் விஷேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று 01ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அவுஸ்திரேலிய வர்த்தகரான ப்ரயன் செடிக் என்பவருக்கு சொந்தமான 110 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகள், போலி அட்டோனி அனுமதிப்பத்திரம் மூலம் உதய கம்மன்பிலவினால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ப்ரயன் செடிக் என்பவரின் அட்டோனி அனுமதிப்பத்திர உரிமையாளரான லசித பெரேராவினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டிலேயே உதய கம்மன்பில கைது செய்யப்பட்டிருந்தார்.

பாலித்த தெவரப்பெருமவிற்கு எதிராக ஆசிரியர்களும் பெற்றோரும்-

protestபிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெருமவினால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு, 10 மாணவர்களை மீகஹதென்ன ஆரம்ப பாடசாலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த பாடசாலையின் ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அந்தப் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் இன்று இடம்பெறவில்லை. இன்றுகாலை மீகஹதென்ன ஆரம்ப பாடசாலையின் முன்னால் கூடிய ஆசிரியர்களும் பெற்றோர்களும் பிரதி அமைச்சரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்புக்களை வெளியிட்டனர். எவ்வாறாயினும் கடந்த தினங்களில் பிரதி அமைச்சர் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம், குறித்த 10 மாணவர்களையும் அந்தப் பாடசாலையில் சேர்த்துக் கொண்டதன் பின்னரே நிறைவுக்கு வந்தது. இது தவிர தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மனித உரிமைகள் ஆணையாளரின் பற்றுறுதியை வரவேற்கின்றோம்-கஜேந்திரகுமார்-

gajendrakumarஇலங்கை அரசாங்கத்தின் நீதித்துறையானது, நம்பகத்தன்மையற்றது என்பதால், சுயாதீனமானதும் பக்கச் சார்பானதுமான பொறுப்புக்கூறல் செயன்முறைக்கு சர்வதேச பங்களிப்பு அத்தியாவசியமான ஒரு கடப்பாடு என்பதில், மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தொடர்ந்தும் பற்றுறுதியுடன் இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்’ என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆணையாளரின் அறிக்கை பற்றி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நேற்று உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். அவரது உரையில், ‘இலங்கை அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட பெரும் குற்றங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாகிய தமிழர்களும், இதே காரணத்துக்காகவே, பொறுப்புக்கூறல் செயன்முறைகள் உள்ளக ரீதியாக நிர்வகிக்கப்படுவதை நிராகரித்தும், சர்வதேச பொறுப்புகூறல் செயன் முறைகளையும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள். Read more

கடத்தப்பட்டதாக கூறப்படும் குடும்பஸ்தர் எரிகாயங்களுடன் மீட்பு-

dfgdfgdfமன்னார், பள்ளிமுனையில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான எஸ்.அன்ரன் டெனி (வயது 38), நொச்சிக்குளம் பகுதியில் வைத்து எரிகாயகாயங்களுடன் நேற்றிரவு மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேற்படி நபர், உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்குப் பணிமனையில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் நேற்று முன்தினம் அதிகாலை கடத்தப்பட்டதாக அவரது மனைவி, மன்னார் பொலிஸ் நிலையத்தில் அன்றையதினம் இரவே முறைப்பாடு செய்துள்ளார். உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்குப் பணிமனையில் கடமையாற்றி வந்த அவர், ஆலய பங்குப் பணிமனையில் வைத்து புதன்கிழமை அதிகாலை 2.30க்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். புலனாய்வுத்துறையினர் என தங்களை அறிமுகப்படுத்திய சிலர், மன்னார் பள்ளிமுனையிலுள்ள அவரது வீடடுக்குச் சென்று அண்மைகாலமாக அச்சுறுத்தல்களை விடுத்து வந்துள்ளனர். Read more