sfdfdfdவட மாகாணசபையின் பிரதி அவைத் தலைவர் திரு. அன்டனி ஜெயநாதன் அவர்கள் இன்று காலை முள்ளியவளைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்து தூக்கியெறியப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். அவரது சடலம், மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.