hirunika‘தன்னுடைய தந்தையை கொலைசெய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு சில உயர் அதிகாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர குற்றம்சுமத்தியுள்ளார்.

பாரத லக்ஷ்மனின் நினைவு தினமான இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஹிருணிக்கா இதனை தெரிவித்துள்ளார். இந்த குற்றச்செயல்களுக்கு மறைமுகமாக உதவி செய்த நபர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சம்பவம் இடம்பெற்றபோது சில்வாவின் மருத்துவ பரிசோதனைகளை சமர்ப்பித்த வைத்தியர்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.