studentவவுனியா கணேசபுரம் பகுதியிருலுள்ள விநாயகர் வித்தியாலயத்தின் மாணவி ஒருவருக்கு நேற்று பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று அதிகாலை குறித்த மாணவிக்கு வீட்டில் படுத்திருந்தவேளை பாம்பு கடித்துள்ளது.

எனினும் . கடித்தது பாம்பு என்று தெரியவரவில்லை. நேற்று பகல் 11 மணியளவில் மாணவிக்கு வாந்தி, வயிற்றுவலி என்பன தொடங்கியுள்ளது. உடனடியாக வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். வைத்தியர்கள் பாம்பு கடித்துள்ளது என்று தெரிவித்ததையடுத்து வீட்டிற்குச் சென்றபோது வீட்டில் பாம்பு இருந்துள்ளது. வேல்ஸ்குமார் றம்மியா என்ற 14வயதுடைய மாணவியே உயிரிழந்தள்ளார். மாணவியைக் கடித்த பாம்பு அடித்து போத்தலில் அடைக்கப்பட்டுள்ளது.