Header image alt text

udayaஅவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றின் பங்குகளை போலி ஆவணங்கள் ஊடாக (fraudulent Power of Attorney) விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி சந்தேகநபரை 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்து நீதிபதி பத்மினி எம்.ரணவக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

eravurமட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஹிதாயத் நகரிலுள்ள காணியொன்றிலிருந்து கைக்குண்டுகள் இரண்டை, இன்று மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிதாயத் நகரிலுள்ள செய்யது இப்றாஹிம் ஹமிர் முஹம்மத் என்பவரின் காணியிலிருந்தே இந்தக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. காணி உரிமையாளர், தனது காணியைத் துப்பரவு செய்து வேலி அமைத்துக் கொண்டிருந்தபோது, இந்தக் குண்டுகள் மண்ணுக்குள் தென்பட்டுள்ளன. Read more