 பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு பெல்ஜியம் நோக்கி இன்று அதிகாலை பயணமாகியுள்ளார். 9பேர் கொண்ட குழுவுடன் பிரதமர் அங்கு சென்றுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு பெல்ஜியம் நோக்கி இன்று அதிகாலை பயணமாகியுள்ளார். 9பேர் கொண்ட குழுவுடன் பிரதமர் அங்கு சென்றுள்ளார். 
ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடவே அவர் அங்கு சென்றிருப்பதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. இந்த விஜயத்தின்போது ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட அதிகாரிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து வரிச்சலுகையை மீள பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடவுள்ளார். மேலும் பெல்ஜியத்தின் பிரதமர் மற்றும் பெல்ஜிய இளவரசர் உள்ளிட்ட அந்நாட்டு உயர்மட்ட அதிகாரிகளையும் இதன்போது பிரதமர் உள்ளிட்ட குழுவினர் சந்திக்கவுள்ளனர்.
