nadaநடா புயலின் தாக்கத்தினால் யாழ்.மாவட்டத்தில் 3 மரணம் உட்பட 325 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 30 ஆம் திகதி வங்கக்கடலில் ஏற்பட்ட தாழமுக்கத்தின் காரணமாக யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் பல பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நடா புயலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் சாவகச்சேரியில் மரம் முறிந்து விழுந்து ஒருவரும், குருநகரில் கடலுக்கு சென்ற இரு மீனவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.325 குடும்பங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதுடன் 1107 பேர் வரையில் இத னால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 வீடுகள் பெரிய அளவிலும், 48 வீடுகள் பகுதி அளவிலும் பாதிக்கப்பட்டன. 10 பேர் வரையில் காணாமற் போயிருந்த நிலையில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டனர். என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.