heiroகெய்ரோவின் காப்டிக் தேவாலயத்திற்கு அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
உள்ளூர் நேரப்படி காலை 10.00 மணிக்கு இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில், பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கெய்ரோவில் பாதுகாப்பு தலைவர் காலித் அப்டெல் ஆல் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த வெடிப்பின் காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

நாட்டின் மக்கள் தொகையில் 10 சதம் காப்டிக் கிறிஸ்தவர்களாக உள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று, கிஸாவில் பிரமிட்களுக்கு செல்லும் முக்கிய சாலை ஒன்றில் குண்டு ஒன்று வெடித்ததில் 6 போலிசார் கொல்லப்பட்டனர்.