img_9902இலங்கையின் நான்காவது இளைஞர் பாராளுமன்றத்தின் பொதுத் தேர்தல் நாடளாவிய ரீதியில் நேற்று 18.12.2016 நடைபெற்றது. இவ் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களின் சார்பில் 7 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட கழகத்தின் செயலாளர் ஸ்ரீகரன் கேசவன் 390 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் அமைக்கப்பட்ட 5 தேர்தல் மத்திய நிலையங்களில், வவுனியா பிரதேச செயலகத்தில் 167 வாக்குகளும், கோவில்குளம் இந்துக்கல்லூரியில் 133 வாக்குகளும், வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் 65 வாக்குகளும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தில் 17 வாக்குகளும், செட்டிகுள பிரதேச செயலகத்தில் 8 வாக்குகளும் பெற்று மொத்தமாக 390 வாக்குகளுடன் வவுனியா இளைஞர்களின் குரலாக ஸ்ரீகரன் கேசவன் நான்காவது பாராளுமன்றம் செல்லவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

img_9863 img_9868 img_9869 img_9874 img_9875
img_9902