wijayadasaவவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நேற்றையதினம் வவுனியா வர்த்தக சங்கத்தினருடன் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டிருந்தார்.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் ஓவியா விருந்தினர் விடுதியில் வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராசலிங்கம் அவர்களின் தலைமையில் இச் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் வவுனியா வர்த்தக உரிமையாளர்கள் தாம் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்த நிலையில் அமைச்சரினால் சில விடயங்களுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டதாகவும் வர்த்தக சங்கத் தலைவர் தெரிவித்தார். இந்த சந்திப்பில் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.