pujitha jayasundaraஊடகங்களுக்கு செய்தி வழங்குவது தொடர்பில் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கவில்லையென பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் ஊடகங்களுக்கு செய்தி வழங்குவது தொடர்பில் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதற்கு எந்தவித ஏற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லையெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் தனியார் ஊடகங்களுக்கு செய்தி வழங்குவதற்கு கட்டுப்பாடுகளை கொண்டுவரவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.