Header image alt text

fdகாணி விடுவிக்கப்படும் என்ற தகவலை அடுத்து ஆவலோடு காத்திருக்கின்றோம். வெற்று வாக்குறுதிகளை மட்டும் நம்பி போராட்டத்தை கைவிடமாட்டோம். எமது சொந்த நிலங்களில் கால் பதித்த பின்னரே எமது போராட்டத்தை நிறுத்துவோமென இன்றும் 16 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக கொட்டும் பனியிரவையும் சுட்டெரிக்கும் வெயிலையும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என அனைவரும் கடந்த 31.01.2017 தொடக்கம் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். Read more

asfdஅவுஸ்திரேலியா செல்லும் நோக்கில் மனிதக் கடத்தல்காரர்களிடம் சிக்கி அகதி முகாம்களில் தங்கியுள்ள இலங்கையர் மீண்டும் நாடு திரும்புமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்த அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் கென்பரா நகர பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். அந்நாட்டின் பிரதமர் மெல்கம் டர்ன்புல்லுடன் இணைந்து இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. Read more

dfgfதமது நிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக கடந்த 13 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மக்கள் நேற்றுமுதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரத்தில் மூவர் வீதம் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றுமுதல் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்க்கு முன்னால் பொதுமக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 3ஆம் திகதி தொடக்கம் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. Read more

gfgfமன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் மன்னார் மாவட்ட நீதவான், நீதிமன்ற நீதிபதி ஏ.சி. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களைப் பகுப்பாய்விற்கு உட்படுத்துவது தொடர்பில் வெளிநாட்டு நிறுவனமொன்றுடன் பரிமாற்றிக்கொள்ளப்பட்ட மின்னஞ்சல் குறித்து நீதிமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது. Read more

shani abesekaraஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, 5 மாணவர் கடத்தல் உள்ளிட்ட வெள்ளை வேன் கடத்தல்கள், வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம், லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரம் உள்ளிட்ட பிரபல விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக் குழுக்களை வழி நடத்தும் சிறப்பு விசாரணையாளரான சானி அபேசேகர சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக (எஸ்.எஸ்.பி.) பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

கடந்த 2016 ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரொஇயந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

unஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், எதிர்வரும் மார்ச் மாத அமர்வில், இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் ஒன்றிற்கு பிரித்தானியா அனுசரணை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய தீர்மானம் ஒன்றை பிரித்தானியா கொண்டுவரவுள்ளதாக மனித உரிமை பேரவையின் 34 ஆம் அமர்விற்கான ஏற்பாட்டுக்குழுக் கூட்டத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த அமர்வு தொடர்பான அமைப்புக்கள் ரீதியான கூட்டம் நேற்று நடைபெற்றிருந்தது. இக் கூட்டத்தில் 34 ஆவது ஜெனீவா அமர்வில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானங்கள் மற்றும் குழு அல்லது பக்கநிகழ்வுகள் உள்ளிட்ட திட்டமிடப்பட்டுள்ள முன்னெடுப்புக்களை பகிர்ந்துகொள்ளுமாறு பிரதிநிதிகளுக்கு மனித உரிமை பேரவையின் தலைவரினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. Read more

asdsdமுல்லைத்தீவு அம்பகாமம் காட்டுக்குள் இருந்து இன்றுகாலை புலிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆட்லறி செல்கள் சில மீட்கப்பட்டுள்ளன. விமானப் படையினரால் குறித்த ஆட்லறி செல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு எறிகணையும் 16 கிலோ கிறாம் கொண்டது என்றும் விமானப் படையினர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த அம்பகாமம் காட்டுப் பகுதிக்கு அருகில்தான் 2009 முன் புலிகள் பயன்படுத்திய விமானப் படைத்தளம் காணப்படுகிறது. தற்போது அது இலங்கை விமானப் படையினரின் பயன்பாட்டில் உள்ளது.

asdsadமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச செயலகமும், வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பும் இணைந்து, உடல், உள மேம்பாட்டு வாரத்தை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வுகளை இன்று நடாத்தியுள்ளனர்.

வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் சி.பரமானந்தம் அவர்களது தலைமையில் வாழைச்சேனை இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந் நிகழ்வின்போது, கிடுகு பின்னுதல், தேங்காய் திருவுதல், குண்டு, பரிதி எறிதல், அப்பிள் சாப்பிடுதல், வலைப்பந்தாட்டம் உட்பட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. Read more

erretrஅமெரிக்காவில் சட்டபூர்வமான ஆவணங்கள் எதுவுமின்றி வசித்து வந்த, பல்வேறு சட்டவிரோத குடியேற்றவாசிகளை கண்டுபிடித்து வெளியேற்றும் நடவடிக்கைகளை அந்நாட்டு பொலிஸாரும், குடிவரவு திணைக்கள அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 30லட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள். என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்திருந்தார். குறித்த வாக்குறுதியிற்கிணங்க, பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவால், அமெரிக்காவிலிருந்து சுமார் 30 இலட்சம் சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் பொலிஸாரும், குடிவரவு திணைக்கள அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. Read more

fdதமது காணிகளிலுள்ள அடையாளங்களை இராணுவத்தினர் அழிப்பதாக, பிலவுக்குடியிருப்பு மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் விமானப்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து, பிலவுக்குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமது அடையாளங்களை இராணுவத்தினரல் அழிப்பதாக குற்றம் சுமத்தியுள்ள இம்மக்கள் அது குறித்து தெரிவிக்கையில், ‘எமது காணிகளிலுள்ள பயன்தருமரங்களை இராணுவத்தினர் அழித்து வருகின்றனர், நாம் போராட்டம் ஆரம்பித்த பின்னர், அங்கு வருபவர்களிடம், எமது காணிகளில் நாம் வாழ்ந்ததுக்கான ஆதாரங்களாக, வீடுகளின் அத்திவாரங்கள், மலசலகூடங்கள், கிணறுகள், நீண்டகால பயிர்கள் எனபவற்றை அடையாளம் காட்டி வருகின்றோம். Read more