Header image alt text

ravirajதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். முன்னதாக ரவிராஜ் கொலை வழக்கு விஷேட ஜூரி சபை முன் விசாரிக்கப்பட்டு, சந்தேகநபர்களான ஐவரும் விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்டது. எனினும், பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை விஷேட ஜூரி சபை முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது சட்டத்துக்கு முரணானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. Read more

dffffffffffffநில ஆக்கிரமிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், யாழ். மாவட்ட தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் கிராமிய உழைப்பாளர் சங்கம் ஆகியவை இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தன.

யாழ். மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக இன்றுகாலை 10.00 மணியளவில் ஒன்று கூடிய மக்கள் மிக ஆக்ரோசமாக தமது கண்டனத்தினையும் எதிர்ப்பினையும் தெரிவித்தனர். நல்லாட்சி அரசாங்கமே கேப்பாபுலவில் நில ஆக்கிரமிப்பினை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கும் மக்களின் காணிகளை மீளக் கையளி, வலி.வடக்கு மக்களை மீள்குடியேற்றம் செய், அரசியல் கைதிகளை விடுதலை செய், Read more

sமட்டக்களப்பு மாவட்ட தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை நடாத்திவருகின்றனர். மாகாண, மத்திய அரசாங்கம் தமக்கான தொழில் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி நேற்றுக்காலை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சாத்தவீக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்கா முன்பாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பு போராட்டத்தினை நடத்திவருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற நிலையில் 1600ற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்ளதாகவும் தங்களது எதிர்காலம் தொடர்பில் அரசாங்கம் சிந்திக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமது நியாயமான கோரிக்கைகளை அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக புறந்தள்ளி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள குறித்த பட்டதாரிகள் தேர்தல் காலங்கள் வரும்போது மட்டும் தங்களை நாடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர். Read more

sfdவவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் விடுதலைப் புலிகள் நான்கு பேர் இன்றுகாலை சமூகத்துடன் இணைத்து வைக்கும் நிகழ்வில் அவர்களது குடும்பத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப்பணியகத்தில் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பணிப்பாளர் கேணல் ஹமில்டோன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக புனர்வாழ்வு நிலைய பயிற்சிப் பொறுப்பாளர் கேணல் சித்திரகுணதூங்க, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த குணசேகர, புனர்வாழ்வு நிலைய பின்னாய்வு அதிகாரி ஏகன் பெர்ணான்டோ, பூந்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமயத் தலைவர், முன்னாள் போரளிகளின் குடும்ப உறுப்பினர்கள், படையினர், பொலிஸார், விமானப்படையினர் என பலரும் கலந்து கொண்டனர். Read more

IMG_2637வவுனியா கோவில்குளத்தைச் சேர்ந்த திரு கி.சங்கர் அவர்கள் தொகுத்து எழுதிய “வெற்றிக்கு வழிகாட்டி” எனும் பொது அறிவு சார்ந்த நூல் வெளியீட்டு விழா வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில் கல்லூரி முதல்வர் திரு ரி.பூலோகசிங்கம் அவர்களின் தலைமையில் 17.02.2017 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

நூல் வெளியீட்டு விழாவின் பிரதம அதிதியாக வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு அதிதிகளாக கோவிக்குளம் இந்துக் கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர் கலாபூசணம் க.சிவஞானம் அவர்களுடன் ஓய்வுபெற்ற அதிபர் திரு சி.வையாபுரிநாதன் அவர்களும் கலந்துகொண்டார்கள். நிகழ்வில் கௌரவ அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.
Read more

amnesty internationalaஇலங்கையில் உண்மை மற்றும் நீதி பொறிமுறைகளில் பங்குகொண்டு உயிர் அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்கின்றவர்களை தங்களது நாடுகளில் குடியேற்றிக்கொள்ள ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் இணங்க வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தல் விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் இலங்கையுடன் உடன்படிக்கைகளை செய்துகொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இலங்கையின் நீதி உண்மை மற்றும் நட்டஈட்டு பொறிமுறைகள் சர்வதேச தரத்தையும் மீளிடம்பெறாமையையும் உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை தொழிநுட்ப உதவிகளை வழங்க வேண்டும். Read more

aaaகேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் நேரில் சென்று அந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் நிலங்களையும் பார்வையிட்டுள்ளனர்.

மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி நேற்று 21ஆவது நாளாகவும் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்றுமாலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் குறித்த போராட்டக்களத்துக்கு விஜயம் செய்திருந்தனர். Read more

ssகிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளின் போராட்டம் ஒன்றை இன்றுடன் இரண்டாவது நாளாக தொடர்கின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு முன்னால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காணாமற்போனோரின் பெயர் விபரங்களை வெளியிடுமாறும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலஅவகாசத்தை வழங்குவதற்கு இணங்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

vdகிளிநொச்சி வன்னேரிக்குளம் மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவரை நியமிப்பதில் 10 வருடங்களாக, அதிகாரிகள் இழுத்தடிப்புகளை மேற்கொண்டு வருவதாக, கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த மருத்துவமனையில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக பணியாற்றிய மருத்துவர் இடமாற்றம் பெற்றுச்சென்றதை அடுத்து, கடந்த 10 வருடங்களாக, நிரந்தர மருத்துவர் நியமிக்கப்படவில்லை. வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1000 குடும்பங்கள், தங்கள் மருத்துவ தேவைகளுக்கு அக்கராயன் பிரதேச மருத்துவமனைக்கே செல்ல வேண்டியுள்ளது. Read more

sfsயாழ். குறிகாட்டுவானுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே பயணிகள் சேவையில் ஈடுபட்ட நெடுந்தாரகை இன்றுகாலை 10.30 மணியளவில் நெடுந்தீவில் தரைதட்டியுள்ளது.

இதனால் படகு சிறிது சரிந்துள்ளது.

ஆயினும் கடற்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பயணிகளை பத்திரமாக வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.