Header image alt text

sdsdssdsdssகேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 117ஆவது நாளை எட்டியுள்ளது. கடந்த மார்ச் மாதம் கேப்பாபுலவு இராணுவ முகாமுக்கு முன்பாக கூடாரம் அமைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம், தீர்வின்றிய நிலையில் தொடர்கின்றது. 138 குடும்பங்கள், தமக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, இந்தத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. கடந்த 2008ஆம் ஆண்டு, சொந்த நிலங்களில் இருந்து வெளியேறிய மக்கள், இதுவரை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. எனினும் தமது காணி விடுவிப்பு தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கொடுத்த வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அத்துடன், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம், இன்று 126ஆவது நாளாக இடம்பெற்று வந்தது. இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று, 110ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. மேலும், வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக இடம்பெற்று வரும் போராட்டம், இன்று 122ஆவது நாளை எட்டியுள்ளது. எனினும், இப்போராட்டங்களுக்கு எவ்வித தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில், மக்கள் வௌ;வேறு முறைகளில் தமது போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

doctorsநாட்டில் மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையினால், நோயாளர்கள் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 5000 மருத்துவர்களை வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில், அரசாங்கத்தினால் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMG_5534வவுனியா, சிதம்பரபுரம், கற்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சி. சிவபாக்கியம். இவரது கணவர் நடக்கமுடியாமலும், கண் பார்வையற்றவராகவும் உள்ளார். அவருடைய இரண்டு பெண் பிள்ளைகளும் மாணவர்களாக உள்ளனர். இவர் சிதம்பரபுரம் வைத்தியசாலை முன்பாக சிறிய பெட்டிக்கடை வியாபாரம் செய்து குடும்பத்தை பேணி வருகிறார். தனது வியாபாரத்தை விரிவாக்கும் நோக்குடன் புளொட் அமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மூலம் உதவி கோரியிருந்தார். இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட புளொட் அமைப்பின் லண்டன் கிளை உறுப்பினர் திரு. த. சிவபாலன் அவர்கள் ரூ 20000/- ஐ நன்கொடையாக வழங்கியுள்ளார். Read more

amnesty internationalaகாணாமல்போனோர் தொடர்பான பணியகத்தை எவ்வித தாமதங்களுமின்றி இலங்கை அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய இயக்குரநர் பிராஜ் பட்நாய்க் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையர்களின் காயங்களை நீதியால் மாத்திரமே குணப்படுத்த முடியும். அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் ஏற்கனவே நீண்ட காலமாக காத்திருக்கின்றன. இந்த நிலையில், அவர்களால் மேலும் நீண்ட காலத்துக்கு காத்திருக்க முடியாது என்றும் பிராஜ் பட்நாய்க் குறிப்பிட்டுள்ளார். காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தில் பால்நிலை சமத்துவதும் பேணப்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது

sddsநாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை முடிவுக்குக் கொண்டுவர அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து உடனடியாக பணிப்பகிஷ்கரிப்பை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டது. ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என தாம் நம்புவதாகவும் நோயாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

valluvar01இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைகளை தமிழர் பகுதிகளில் நிறுவும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக  கடந்த 16.06.2017 அன்று முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் VGP நிறுவனத்தின் தலைவர் உட்பட சுமார் 30 பேர் வரையில் தமிழகத்தில் இருந்து வருகை தந்து கலந்து கொண்டிருந்தனர். மேலும் வடமாகாண சபையின் முல்லை மாவட்ட உறுப்பினரும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளருமான க.சிவநேசன் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஆகியோரும் பங்கு பற்றியிருந்தனர். நிகழ்வில் திருவுருவச்சிலை குறித்த நினைவுக்கல் பதித்தல், விழாவுக்கு வருகைதந்திருந்த பிரமுகர்களுக்கான விருந்தோம்பல் ஆகியவற்றுக்கான செலவினை சுவிஸ் நாட்டிலிருந்து புளொட் தோழர்கள் செல்வபாலன், மனோ, தீபன், ராஜேந்திரம் ஆகியோர் பொறுப்பேற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

world bankஇலங்கையின் உயர் கல்வி நடவடிக்கைகளுக்காக 10கோடி அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கி முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியின் மூலம் உயர் கல்வி பெறும் மாணவர்கள் பெரிதும் நன்மை அடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலக வங்கியினால் 115 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கல்வி தொடர்பான நடவடிக்கைகளில் இலங்கை 88ஆவது நாடாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

sddsசய்டம் நிறுவனத்திற்கு எதிரப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் சய்டம் நிறுவனத்திற்கு எதிரப்பு தெரிவித்து நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட பரந்தளவிலான வேலை நிறுத்தம் இன்றும் இடம்பெறுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. நேற்றுக் காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகிய முழு அளவிலான வேலை நிறுத்தத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. Read more

kumar gunaratnamமுன்னிலை சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டாளர் குமார் குணரத்னத்திற்கு இந்த நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் இது குறித்த கடிதம் கிடைக்கப்பெற்றதாக அந்த கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா மற்றும் இலங்கையினதும் இரட்டைக் குடியுரிமையை பெற்றிருந்த குமார் குணரத்னத்தின் அவுஸ்திரேலிய குடியுரிமை கடந்த 31ஆம் திகதி இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதற்கு பின்னர் குமார் குணரத்னம் எவ்வித தடையுமன்றி அரசியல் நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

sfddfdகிளிநொச்சி இரணைதீவு மக்களால் பேரணியாக வந்து முழங்காவில் மகாவித்தியாலயத்திற்கு அருகில் உள்ள ஏ32 மன்னார் வீதியை மறித்து தமக்கான தீர்வினை கோரி நடத்தப்பட்ட வீதிமறிப்புப் போராட்டம் பூநகரி பிரதேச செயலரின் உறுதி மொழிக்கமைய இன்றுகாலை முடிவிற்கு வந்தது.

கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள் தங்களின் சொந்த இடத்திற்குச் செல்வதற்கான அனுமதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை கடந்த ஐந்தாம் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்திருந்தனர். Read more